Friday, December 23, 2011

7 லட்சம் டன் உணவு தானியங்கள் வீணாகியுள்ளன தினமும் 20 கோடி பேர் பட்டினி கிடக்கும் நாட்டில்

கடந்த 10 ஆண்டுகளில், ரூ.330.71 கோடி மதிப்புள்ள 7.42 லட்சம் டன் உணவு தானியங்கள் பல்வேறு காரணங்களினால் வீணாகியுள்ளது என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் தெரிவிக்கின்றது.

தகவல் உரிமை ஆர்வ லர் ஓம்பிரகாஷ் சர்மாவின் மனுவிற்குப் பதிலளித்த இந்திய உணவுக் கழம் இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

உலகில் போதிய உணவு இல்லாமல் இறப்பவர்களில் முன்றில் 1பங்கு இந்தியாவை சேர்ந்வர்களே அதுவும் ஒரு நிமிடத்திற்கு 5 இந்தியர்கள் இறக்கிறார்கள் ஆண்டுக்கு 25 இலட்சம் பேர் இறந்துபோகிறார்கள் ஒருவேலை உணவோடு 20கோடி இந்தியர்கள் படுக்கபோகிறார்கள் ஆனால் இந்திய அரசோ உணவுகளை எலிகளுக்கு கொடுப்போம் மனிதர்களுக்கு அல்ல என்று உச்சநீதிமன்றத்திடமே 

இந்திய உணவுக் கழகம் தனது பதிலில், ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2011 வரையில் ரூ.330.71 கோடி மதிப்பி லான 7.42 லட்சம் டன் உணவு தானியம் வீணாகி யுள்ளது என்று தெரிவித் துள்ளது.

2010-2011 வரையிலான காலகட்டத்தில் ரூ.3.40 கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் வீணாகியுள்ளன.