Tuesday, July 27, 2010

தகவல் கேட்டால் கொலைதான் பரிசு வேடிக்கை பார்க்கும் அரசு

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கடந்த 7 மாதத்தில் மட்டும் 8பேர் கொல்லப்பட்டுள்ளனர் பத்துமேற்பட்டோர் தாக்கப்பட்டுள்ளனர்

Following 8 RTI activists were killed in last 7 months:-

1) July 20, Amit Jethwa, Ahmedabad, Gujarat
2) May 31 (or 26th May), Datta Patil, Kolhapur, Maharashtra
3) April 21, RTI activist Vitthal Gite, Beed, Maharashtra
4) April 11, Sola Ranga Rao, Krishna District, Andhra Pradesh
5) February 26, Arun Sawant, Badlapur, Maharashtra
6) February 14, Shashidhar Mishra, Begusarai, Bihar
7) February 11, Vishram Laxman Dodiya, Ahmedabad, Gujarat
8) January 13, Satish Shetty, Pune, Maharashtra

According to Shri Babulal Vaghela about 20 person were attacked in 2010.

Thursday, July 22, 2010

தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கொலையில் பாஜக எம்.பி.க்கு தொடர்பு

தகவல் அறியும் உரி மைச் சட்ட ஆர்வலர் அமித் ஜித்வா, மோட்டார் சைக்கிளில் வந்த அடையா ளம் தெரியாத மர்ம நபர் களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இக் கொலையின் பின்னணியில் பாஜக எம்பி ஜூண்டாகத் டினு சோலங்கி இருக்கிறார் என்று அமித் ஜித்வாவின் தந்தை குற்றம் சாட்டி யுள்ளார்.

குஜராத் கிர் வனப்பகுதி யில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக் கும் சுரங்கங்கள் பற்றி அமித் ஜித்வா பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்குத் தொடர்ந்த சிலநாட்களுக் குள் அடையாளம் தெரி யாத மர்மநபர்களால் அமித் சுட்டுக் கொல்லப்பட்டார். செவ்வாயன்று இரவு அவர் தனது வழக்கறிஞரைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது சுடப்பட்டுள்ளார்.

டினு சோலங்கியைத் தொடர்பு கொள்வதற்காக பலமுறை அவரது மொபைல் போனில் தொடர்பு கொண் டபோதும், அலுவலகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதும் அவரு டன் தொடர்பு கொள்ள இயலவில்லை.

அமித் ஜித்வாவின் தந்தை பிகாபாய் ஜித்வா,”எனது மகனைக் கொலை செய்த பின்னணியில் உள்ளவர் டினு சோலங்கி எம்.பி தான். அவர் பல தடவை என் மகனை தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து, பாஜக செய்தித் தொடர்பாளர் ஐ.கே. ஜடேஜா இதுபற்றிக் கருத்துக் கூற மறுத்து விட்டார்.

மேலும், இது அரசியல் பிரச்சனையல்ல. இது போன்ற குற்றச்சாட்டுகள் சகஜம். அவை நிரூபிக்கப்பட்டால் தான் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித் தார்.

கொலை செய்யப்பட்ட அமித் ஜித்வா தகவல் அறி யும் உரிமைச்சட்டத்தில் தீவிர ஆர்வலராக இருந்தார். குறிப்பாக வனவிலங்கு களைப் பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். கிர் வனப்பகுதியில் உள்ள சிங்கங்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளவர். பிரபல திரைப்பட நடிகர் அமீர் கான் சிங்காரா வனப்பகுதி யில் மிருகங்களை வேட் டையாடிய வழக்கில் புஜ் செசன்ஸ் நீதிமன்றத் தீர்ப் பை எதிர்த்து உயர்நீதிமன் றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்தார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் பெறுமாறு மற்றவர் களுக்கும் பயிற்சி அளித்தார். தற்போது கிர் வனப்பகுதி யில் திருட்டுத்தனமாக மணல்குவாரி அமைத்து மணல் திருடுகிறவர்கள் அதிகரித்துள்ளனர். ஜூனா கத் மாவட்டம் கிர் வனப் பகுதியில் மணல் திருடு வதை எதிர்த்து உயர்நீதிமன் றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மேலும் அம்ரேலி மாவட்டம் கம்பா தாலுகா வில் கிர் இயற்கை இளை ஞர் மன்றம் ஒன்றைத் துவக்கியுள்ளார்.

பொதுநலவழக்கில் லோக் அயுக்தா தொடங்கு வதில் அரசின் செயலற்ற தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். இவரு டைய பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், காலியாக உள்ள பணியிடங் களில் தகவல் அளிக்கும் அலுவலர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது.

Monday, July 12, 2010

ஆண்டர்சன் விவகாரம்: தகவல் அளிக்க சிபிஐ மறுப்பு

போபால் விஷவாயு படுகொலையில் முக்கியக் குற்றவாளியான ஆண்டர்சனை நாடு கடத்துவது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திற்கும், மத்திய புலனாய்வுக் கழகத்திற்கும் (சிபிஐ) இடையே நடை பெற்ற தகவல் பரிமாற்றங்களை வெளியிட முடியாது என்று சிபிஐ பதில் அளித் துள்ளது.


ஆண்டர்சனை நாடு கடத்துவது குறித்து கோரிக்கையை தொடர வேண் டாம் என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக, போபால் பேரழிவு சம்பவம் தொடர்பாக 1994-95ல் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து, இதுதொடர்பான விப ரங்களை அறிய தகவல் உரிமைச் சட் டத்தின் கீழ் அபிஷேக் சுக்லா என்பவர் சிபிஐ.,க்கு மனுச் செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் மேற்கண்டவாறு தகவல் தர இயலாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், ஆண்டர்சனை மீண்டும் இந்தி யாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பழைய விபரங்களை வெளியிடுவது தற்போதைய நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக் கும் என்று சிபிஐ தனது பதிலில் குறிப் பிட்டுள்ளது.

1984-ல் நிகழ்ந்த போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோருக்கு நிரந்தரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.

ஆனால், இந்த முக்கியக் குற்றவாளி ஆண்டர்சன் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.