Wednesday, August 17, 2011

RTI போராளி ம.பி.யில் கொலை

பெண் தகவல் உரிமையாளர் ஷேஹ்லா மசூத், கோஹ் - இ- பிசா பகுதி யில் உள்ள அவரது பங்க ளாவின் முன் அடையா ளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் ஆதர்ஷ் கட்டியார் கூறினார்.

காரில் அமர்ந்திருந்த போது ஷேஹ்லா சுட்டுக் கொல்லப்பட்டார் என் றும், குற்றவாளிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப் பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிர தம் இருந்த ஷேஹ்லா பல் வேறு மேம்பாட்டுத் திட் டங்களில் தன்னை ஈடு படுத்தி வந்தார். மத்தி யப்பிரதேச வனவிலங்கு சரணாலயங்களில் புலிகள் மடிந்து வருவது குறித்தும் அவர் பிரச்சனைகளைக் கிளப்பி வந்தார்.

Thursday, August 11, 2011

RTI:விடைத்தாள்களை ஆய்வு செய்யும் உரிமை மாணவர்களுக்கு உண்டு

நாட்டில் உள்ள சட்டங் களின்படி, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தங்கள் விடைத்தாள்களை ஆய்வு செய்யும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் முக் கிய தீர்ப்பு அளித்துள்ளது.

மாணவர்களின் விடைத் தாள்களின் மீதான மதிப் பீடுகளைத் தெரிந்து கொள் ளும் உரிமை மாணவர் களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உண்டு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி.ரவீந் திரன் மற்றும் ஏ.கே.பட் நாயக் ஆகியோரடங்கிய பெஞ்சு தெரிவித்துள்ளது.

‘‘விடைத்தாள்களை ஆய்வு செய்தலை நிராகரித் திருப்பதானது ஏற்கத்தக் கல்ல’’ என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் அளித் திட்ட தீர்ப்பை உச்சநீதி மன்ற பெஞ்சு இப்போது பிறப்பித்துள்ள தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது.

கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம், கொல்கத்தா பல்கலைக் கழகம், இந்திய சார்டர்டு அக்கவுண்டண்ட் இன்ஸ்டிட்யூட், மேற்குவங்க மத்திய பள்ளித் தேர்வா ணையம் மற்றும் மத்திய இடைநிலைப் பள்ளிகள் வாரியம் ஆகியவை மேல் முறையீடுகள் தாக்கல் செய் திருந்தன. இதேபோல் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருத்தப்பட்ட விடைத் தாள்களைக் காண்பிப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் அரசு பொதுத் தேர்வு ஆணையமும், பீகார் அரசு பொதுத் தேர்வு ஆணைய மும்கூட ஆட்சேபணைகள் தெரிவித்து மேல்முறையீடு கள் செய்திருந்தன. மேற்படி அமைப்புகள் அனைத்தும் கொல்கத்தா உயர்நீதிமன் றம் 2009 பிப்ரவரி 5 அன்று இது தொடர்பாக பிறப்பித் திருந்த தீர்ப்பை ஆட்சே பித்து இவ்வாறு மேல் முறை யீடுகள் செய்திருந்தன.

இவ்வாறு இவை தாக் கல் செய்திருந்த மேல்முறை யீடுகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எந்த ‘நம்பிக்கையின் அடிப்படையில்’ மட்டும் திருத்தப்பட்ட விடைத் தாள் களைத் தங்கள் வசமே வைத் திருக்கும் உரிமையைத் தேர்வு நடத்தும் அமைப்பு கள் வசம் ஒப்புவித்திடக் கூடாது என்கிற உயர்நீதி மன்றத்தின் முடிவுகளையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

விடைத்தாள்களின் மதிப்பெண்கள் அளித்தி ருப்பதை வெளிப்படுத்து வது என்பதும், அவற்றை மாணவர்கள் ஆய்வு செய் திட அனுமதிப்பது என்ப தும் தேர்வு முறையையே நிலைகுலையச் செய்து விடும் என்று இந்த அமைப் புகளின் சார்பில் முன்வைக் கப்பட்ட வாதங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட் டது.

கொல்கத்தா உயர்நீதி மன்றமானது தன்னுடைய டிவிஷன் பெஞ்சு மூலம் அளித்திருந்த தீர்ப்பில், மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம், மத்திய இடைநிலைக் கல்வி வாரி யம் அல்லது பல்கலைக் கழ கங்கள் தாங்கள் நடத்தும் தேர்வுகளில் மாணவர் களின் விடைத்தாள்கள் எவ் வாறு மதிப்பீடு செய்யப் பட்டிருக்கின்றன என்று பரிசீலிக்கும் உரிமை, தகவல் அறியும் சட்டத்தின் வரை யறைப்படி மாணவர்க ளுக்கு உண்டு என்று தீர்ப் பளித்திருப்பதை உச்சநீதி மன்றம் அப்படியே ஒப்புக் கொண்டுள்ளது.

‘‘தாங்கள் எழுதிய விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யப் பட்டிருக்கும் விதத்தை மீண்டும் அந்த மாணவர்கள் பார்ப்பதென்பது அவர்கள் தங்கள் தரத்தை மேலும் முன்னேற்றிக்கொள்வதற்கு நிச்சயமாக உதவிடும். விடை களைத் திருத்துவதற்காக நியமனம் செய்யப்படும் ஆராய்வாளர்கள் விடை திருத்துவோர், அவ்வாறு நியமித்திடும் வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங் களின் ஊழியர்கள் கிடை யாது. அவர்கள் அத்தகைய அமைப்புகளின் ஒழுங்கு முறை கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்’’ என் றும் உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.