Thursday, September 25, 2014

குழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான முந்தைய தீர்ப்பை திருத்தம் செய்த சென்னை ஐகோர்ட்


சென்னை ஐகோர்ட்டின் நிர்வாக பதிவாளராக இருப்பவர் வி.விஜயன். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:- 

புதுச்சேரியை சேர்ந்த பி.பாரதி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை கேட்டு 53 மனுக்களை அனுப்பியுள்ளார். அதில், சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார். 

தலைமை மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான புகார் முடித்து வைக்கப்பட்டது பற்றிய விவரமும், தலைமை பதிவாளர் நியமனத்தில் தனி நடைமுறைகள் இல்லை என்ற விவரமும் அவருக்கு பதிலாக வழங்கப்பட்டது. இதுதவிர வேறு எந்த பதில்கள் எல்லாம் வழங்க முடியுமோ அவைகளும் வழங்கப்பட்டு விட்டது. 

ஆனால், அவர் தகவலறியும் உரிமைச் சட்ட விதிகளைத் தவறாகப் பயன்படுத்தும் வகையிலும், நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் 53 மனுக்களை தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில், மத்திய தகவல் ஆணையத்தில் பாரதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், அவர் கேட்கும் தகவல்களை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் விஜயன் தெரிவித்திருந்தார்.
 
இந்த மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் விசாரித்து, கடந்த 18-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் கூறியிருந்ததாவது:- 

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் படி, தகவல்களை பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகன்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால், அந்த உரிமையானது தகவல் அறியும் சட்டத்தில் உள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டதாகும். 

அந்த விதிகளில், எந்தவிதமான தகவல்களை ஒருவர் கேட்கலாம்? அந்தத் தகவல்களைக் கேட்க அவருக்கு என்ன உரிமை உள்ளது? என்பது கூறப்பட்டுள்ளது. அதேநேரம், அந்த உரிமைகளை வரையறுக்கப்படாமல் உள்ளது. 

எனவே, தகவல் அறியும் உரிமையானது ஒரு நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். அதேநேரம், அந்த நோக்கம் சட்டப்படி ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும், அமல்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும். 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்கும் நபர், அந்த தகவல் கேட்பது சொந்த நலனுக்காகவா? அல்லது பொதுநலனுக்கா? என்பது குறித்து குறைந்த பட்ச விவரங்களையாவது மனுவில் தெரிவிக்கவேண்டும். அந்த விவரங்களை தெரிவிக்கவில்லை என்றால், தகவல் கேட்கும் கேள்வி திருப்திகரமாக உள்ளதாக கருத முடியாது.
 
அதேநேரம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வழங்கப்படும் தகவல்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதைப் போல, தகவல் கோருபவருக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. எந்த நோக்கத்துக்காக தகவல் கோரப்படுகிறது என்பதை தெரிவிக்காமல் தகவல் கேட்க முடியாது. 

அரசு நிர்வாகத்தில் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் கொண்டு வரும் நோக்கத்துக்காக இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தச் சட்டம் தவறான நோக்கத்துக்காகவும், நிர்வாகத்தை மிரட்டுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டால், அது அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் தன்னுடைய பாதையில் இருந்து விலகிச் செல்ல வழிவகுத்து விடும். 

அண்மையில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, தகவல் கோருபவற்கு அதற்கான நியாயமான காரணங்கள் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளது. நியாயமான நோக்கத்தில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கும் அதேநேரத்தில், தவறான நோக்கத்தில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும். 

இந்த வழக்கில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எதிர்மனுதாரர் பி.பாரதி ஏராளமான விண்ணப்பங்களை அனுப்பியுள்ளார். இதனால், ஐகோர்ட்டு நிர்வாக பதிவாளர் அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்துள்ளது. ஐகோர்ட்டின் பதிவாளர் அலுவலகம் தகவல்களை வழங்குவதற்காக பணி நேரத்தை செலவு செய்ய முடியாது. எனவே, மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்கிறோம். 

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. 

சென்னை ஐகோர்ட்டின் இந்த கருத்தானது, தகவல் அறியும் சட்டத்தை நல்ல நோக்கத்துக்காக பயன்படுத்தும் சில சமூக ஆர்வலர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கடந்த 18-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் ஒரு திருத்தத்தை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் நேற்று செய்துள்ளனர்.

முந்தைய தீர்ப்பின்படி, தகவல் கோருபவருக்கு எதற்காக அந்த தகவல் தேவைப்படுகிறது? என்பது தெரிவிக்கப்பட வேண்டும் என்பது போல் பொருள்படும் வகையில் நீதிபதிகளின் கருத்து செய்திகளில் வெளியாகியிருந்தது.

நேற்று வழங்கப்பட்ட திருத்தப்பட்ட தீர்ப்பின்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மனு செய்யும் விண்ணப்பதாரருக்கு எதற்காக அந்த தகவல் தேவைப்படுகிறது? என்பது தொடர்பான காரணங்கள் எதையும் அவர்கள் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

மேலும், மனுதாரர்களை தொடர்புக் கொள்ளும் தேவைக்கன்றி, வேறு எவ்விதமான தனிப்பட்ட விபரங்களையும் அவர்கள் இணைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Wednesday, August 20, 2014

Most Information commissions fail transparency test

Information commissions — watchdogs for the transparency regime under theRTI Act — are some of the most opaque organizations according to an independent report. 

Of the 29 commissions in the country, only 17% have the facility of online filing of appeals and complaints, 42% do not display information on the cases that will be heard that day or that week, 58% do not display the updated status of pending appeals and complaints while 35% do not have a system of making their orders public within a reasonable timeframe. 

The report prepared by Commonwealth Human Rights Initiative (CHRI) also revealed that there was a steady increase in the number of RTI queries in 2012 as compared to the previous year. While Gujarat and Odisha saw a 46% increase in applications, Karnataka witnessed 29% increase. There was a 19% increase in RTI appeals with the Central Information Commission (CIC). 

More than three-fourths of the commissions do not have a website in the local language. The CIC and state information commissions of Chhattisgarh, Gujarat, Maharashtra and Uttar Pradesh have local language websites. 

Only 17% of information commissions provide online facilities for submitting appeals or complaints or both. While the CIC, Gujarat and Tripura commissions accept online filing of both appeals and complaints, their counterpart in Bihar provides this facility for filing second appeals only. 

About 42% of information commissions do not display cause lists on their websites that will help the public know what cases are likely to be heard by the commission. These include commissions in Assam, Bihar, Goa, Madhya Pradesh, Manipur, Meghalaya, Mizoram and Sikkim that continue to resist the idea of displaying cause lists on their websites, the report said. 

About 58% of commissions including Arunachal Pradesh, Assam, Bihar, Chhattisgarh, Goa, Gujarat, Himachal Pradesh, Jharkhand, Madhya Pradesh, Manipur, Mizoram, Nagaland, Sikkim, Tamil Nadu, Tripura, Uttar Pradesh and West Bengal do not provide data on disposal of cases and pendency of appeals and complaints. 

Nineteen of the 29 commissions have made their orders public but the commissions of Arunachal Pradesh, Goa, Jharkhand, Madhya Pradesh, Manipur and Uttar Pradesh do not have updated information for the last 2-4 years. Incidentally, this comes at a time when there has been a sharp increase in RTI applications. Gujarat and Odisha have seen a 46% increase in applications while Karnataka has recorded 29% increase. At 26%, Chhattisgarh witnessed the third highest increase in the number of RTI applications received in 2012 followed by Mizoram at 20%. 

Central Information Commission raps Puducherry for RTI violation

 The Central Information Commission has pulled up Puducherry government for violating provisions of the RTI Act by appointing a single person as public information officer as well as the first appellate authority in a government college. 

The case relates to some information sought by RTI activist L Selvam Flaubert from Bharathiar Palkalaikoodam, a government performing arts college in Puducherry. Information commissioner Yashovardhan Azad, who heard an appeal from Flaubert through videoconferencing on August 2, asked the chairman of the college to rectify the mistake of appointing the same person as public information officer as well as the first appellate authority. 

Azad also pulled up the government for not providing full information - year of establishment of the Karaikal branch of the college, number of employees engaged with names, salary and wages, budget allocation and reasons for closure of the branch - sought by Flaubert. 

The PIO and the first appellate authority, while providing much of the information sought by the RTI activist, said the reason for closure could not be provided as the relevant records were untraceable. The commission directed the government to conduct an inquiry to fix responsibility on officials concerned for loss of records. The government has to send the action taken report to the commission within a month. 

The public information officer, on June 15, 2012, sought three months time to furnish reasons for closure of the Karaikal branch of the college. He said the files were not traceable and he needed time to search them. An appeal to the appellate authority also evoked a similar response on October 30, 2012. 

The activist then preferred an appeal before the central information commission on November 5, 2012. In his complaint, the activist charged that the PIO was deliberately hiding information. 

Monday, June 16, 2014

"தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தீர்ப்புகளுக்கான காரணங்களை வெளியிட முடியாது'

தீர்ப்புகளுக்கான காரணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரவீந்தர் ராஜ் என்ற சமூக ஆர்வலர், உச்ச நீதிமன்றத்தின் பொதுத் தகவல் அதிகாரியிடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனுவைச் சமர்ப்பித்திருந்தார்.
அதில், "விசாரணை ஏதும் நடத்தப்படாமலும், எந்தக் காரணமும் கூறப்படாமலும், மறுசீராய்வு மனுக்கள் மீது நீதிமன்றங்கள் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றன. அந்த உத்தரவுகளுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்ற தகவலை வழங்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.
அந்தத் தகவலை வழங்க தகவல் அதிகாரி மறுத்து விட்டார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு அதிகாரியிடம் ரவீந்தர் ராஜ் முறையீடு செய்தார்.
அவரது மனுவை மேல்முறையீட்டு அதிகாரி தள்ளுபடி செய்து, பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
கண்ணபுரம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "ஒரு நீதிபதி, தான் அளிக்கும் தீர்ப்பு மற்றும் பிறப்பிக்கும் உத்தரவின் மூலம்தான் பேசுகிறார். சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிபதி, ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு ஏன் வந்தார், அதற்கு என்ன காரணம் என்ற விவரத்தை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கோர யாரையும் அனுமதிக்க இயலாது' என்று தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தற்போது தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்டுள்ள மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என்று அந்த உத்தரவில் மேல்முறையீட்டு அதிகாரி கூறினார்.

Monday, January 20, 2014

அரசு ஊழியரின் ஊதியத்தை அறிந்து கொள்ள மக்களுக்கும் உரிமை உண்டு.

அரசுப் பணியில் உள்ள கணவரின் ஊதியத்தை அறிந்துக் கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு என்று மத்திய தகவல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி அரசின் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் தனது கணவரின் ஊதிய விவரங்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஜோதி ஷெராவத் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் ஊதிய விவரங்களை ஜோதிக்கு அளிக்கக்கூடாது என்று அவரின் கணவர் எழுத்துபூர்வமாக கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஊதிய விவரங்களை அளிக்க டெல்லி உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.

இதுதொடர்பாக மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலுவிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த அவர், ஜோதி ஷெராவத்தின் கணவரின் ஊதிய விவரங்களை உடனடியாக அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதை செய்யத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி உள்துறை அமைச்சகத்தை அவர் எச்சரித்துள்ளார்.

பொதுமக்களுக்கும் உரிமை உண்டு

இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு: கணவர் அரசு ஊழியராக இருந்தால் அவரின் ஊதிய விவரங்களை அறிந்துக் கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு.
மேலும் மக்களின் வரிப் பணத்தில் இருந்துதான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே அரசு ஊழியரின் ஊதியத்தை அறிந்து கொள்ள மக்களுக்கும் உரிமை உண்டு. இதுதொடர்பாக அளிக்கப்படும் மனுக்களை அரசுத் துறைகள் நிராகரிக்கக்கூடாது என்று ஸ்ரீதர் ஆச்சார்யலு தெரிவித்துள்ளார்.