Friday, January 21, 2011

R T I :உடலிருக்க உயிரை பறிப்பதா?


உடலிருக்க உயிரை மட்டும் பறிப்பது போல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் இருக்க அதனை பயன்படுத்த விடாமல் முடக்கும் வேலை யில் மத்திய அரசு தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.

தகவல்பெறும் உரிமைச் சட்டம் இடதுசாரி கட்சிகளின் உறுதியான போராட்டத்தால் 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட் டது. அதன் பின்னர் அந்த சட்டத்தின் துணை யோடு இன்று நாடு முழுவதும் அரசு நிர்வாகத் தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள் வெளிச் சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நோக்கமே அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் வெளிப் படைத்தன்மையாக இருக்க வேண்டும்; பொது மக்களுக்கு தேவையான தகவல்களை தரு வதை உறுதி செய்ய வேண்டும் என்பதே.

இச்சட்டம் அதிகார மட்டத்தில் இருப்போர் தங்கள் இஷ்டத்திற்கு சட்டத்தை வளைப்பதற் கும், விதிமுறைகளை மீறுவதற்கும் இடையூ றாக இருந்து வருவதாகக் கருதுகின்றனர். மேலும் பல ஊழல்பேர்வழிகளுக்கும் இச்சட்டம் வேப் பங்காயாகக் கசக்கிறது. உதாரணமாக தில்லி குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் மற்றும் வடி கால் திட்டத்திற்கான ஆய்வை யாரிடம் கொடுப் பது என்று பரிசீலனை நடந்து கொண்டிருந்தது. அப்போது உலகவங்கி தலையிட்டு “ பிரைவேர் அவுஸ்கூப்பர்ஸ்” என்ற நிறுவனத்திற்கு முறை கேடாக ஒதுக்க வைத்தது அம்பலமானது. அதே போல் எவ்வித நேர்காணலோ, விளம்பரமோ, போட்டியோ இன்றி முறைகேடாக பிரதமரின் வலதுகரமாக செயல்படும் மாண்டேக்சிங் அலு வாலியாவின் மகன் திட்ட ஆலோசகர் பதவி யில் அமர்த்தப்பட்டதும் இச்சட்டத்தின் தகவ லின் படி அம்பலமானது.

இப்படிப்பட்ட ஏராளமான மோசடிகளுக்குத் துணைநிற்கும் மத்திய அரசிற்கே இந்த தகவல் பெறும் உரிமைச் சட்டம் இடையூறாக இருக்கிறது. ஆகவே இந்தச் சட்டத்தில் திருத்தம் என் கிறபெயரில் சட்டத்தையே நீர்த்துப்போகச்செய் வதற்கான வழிமுறைகளை மத்திய அரசு உரு வாக்கியிருக்கிறது. அதாவது தகவல் பெற விண் ணப்பிப்போர் ஒரு பொருள் குறித்து மட்டுமே விபரங்கள் கேட்க வேண்டும்; விண்ணப்பம் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண் டும்; விண்ணப்பதாரர்கள் கேட்கும் தகவல் களைத் திரட்டச் செலவு ஆகும் பட்சத்தில் அத னை முழுமையாக விண்ணப்பதாரர்களே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திருத் தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இத்திருத்தங்கள் அமலுக்கு வந்தால், ஒரு பொருள் குறித்த விபரங்களை மட்டும் பெறுவ தால் ஒரு தகவலை முழுமையாகப் பெற முடியாது. இதன் மூலம் முழுமையான தகவலை பெற பல வருடங்கள் இழுத்தடிக்கப்படலாம். மேலும் தகவல் பெற செலவு என்ற வகையில் விண்ணப்பிப்போரிடம் இருந்து பணத்தை கறந்து விரக்தியடையச் செய்ய முடியும். இதற் குள் நுட்பமான விஷயம் ஒன்று உள்ளடங்கி இருக்கிறது. அதாவது சாதாரண மக்கள் இந்த சட்டத்தை பயன்படுத்த முடியாத அளவில் விலக்கி வைப்பது. இப்படிச் சட்டம் இருக்க அத னைச் செயல்படவிடாமல் முடக்கி வைப்பதற்கே இந்தச் சட்டத் திருத்தங்கள் உதவி செய்யும். ஒட்டுமொத்தத்தில் சட்டம் கொண்டு வந்த நோக்கமே குழி தோண்டி புதைக்கப்படும்.

மறுபுறம் தமிழக அரசோ அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. தற்போது போலீஸ் அதிகாரிகளின் முறைகேடுகள், அத்துமீறல் களை விசாரிக்கும் ரகசிய மற்றும் நம்பகத்தன் மை காப்புப் பிரிவுக்கும் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. இப்படி இச்சட்டத்தின் குரல்வளை கொஞ்சம் கொஞ்சமாக நெரிக்கப் பட்டு வருகிறது.