Tuesday, December 18, 2012

தகவல் அறியும் ஆர்வலர் கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

ஆமதாபாத்: குஜராத்தில் தகவல் அறியும் ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கினை சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமித்ஜேத்வா. தகவல் அறியும் உரிசை சட்ட ஆர்வலர், இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம், குஜராத், செளராஷ்டிரா மாவட்டத்தில் உள்ள ஆசிய சிங்கங்கங்களின் சரணாலயமான கிர் காடுகளில் சட்டவிரோதமாக சுரங்க தொழில் நடந்து வருவதாகவும், இதில் அம்மாநில பா.ஜ. எம்.பி. டினு சோலங்கி என்பவருக்கும் தொடர்பிருப்பதாகவும்,இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு தொடர்ந்த சில நாட்களில் (ஜூலை 20-ம் தேதி 2010) அவர் ஐகோர்ட் வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் எம்.பி. உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பா.ஜ. எம்.பி. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில் அமித் ஜேத்வா தந்தை தனக்கு நியாயம் கிடைக்க கோரி ஆமதாபாத் ஐகோர்ட்டில் அமித்ஜேத்வா கொலை வழக்கினை சி.பி.ஐ. விசாரிக்க‌ வேண்டும் என கூறப்பட்டிருந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய டிவிசன் பெஞ்ச்,. மனு ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment