Sunday, January 2, 2011

தகவல் உரிமை ஆர்வலர் தாக்கப்பட்டார்


பிரபல தகவல் உரிமை ஆர்வலர் அருண்மானே அடையாளம் தெரியாத நபர்களால் டாலே காவ் தபாடே அருகில் தாக்கப்பட்டார். கழிகளால் அடிக்கப்பட்ட மானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உயிருக்கு ஆபத்தில்லை. அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவை தீவிரமானவையில்லை என்று புறநகர் காவல்துறை கண்காணிப்பாளர் பி.டேகாவோங்கர் செய்தியாளர் களிடம் கூறினார்.

புனே மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட தகவல் உரிமை ஆர்வலர் சதீஷ் ஷெட்டியின் நெருக்கமான சகாவான மானே தகவல் அறியும் உரிமை இயக்கத் தின் கீழ் பல்வேறு பிரச்சனைகளை கையாண்டு வருகிறார்.

No comments:

Post a Comment