Tuesday, December 21, 2010

தகவல் அறியும் சட்டத்தை பாதுகாப்போம்

Right to Information Act (RTI) என்ற தகவல் அறியும் சட்டம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

அதன் குரல் வளையை நெரிக்க அரசு முயல்வதாக தெரிகிறது.
குறிப்பாக விண்ணப்பங்கள் 250 வார்த்தைகளுக்குள் இருக்கணுமாம்.

250 வார்த்தைகளில் எப்படி நாம் விரும்பும் விவரம் கேட்டபது

இதைத் தவிர இன்னும் பல நெருக்கடிகள் நிறைவேத்த இருக்காம். விவரங்களை இங்கே க்ளிக்கி தெரிந்து கொண்டு பெட்டிஷனில் கையெழுத்து இடவும்.

பரப்பவும்.

நன்றி

http://www.petitiononline.com/rtisave/

முக்கிய திருத்தங்கள்:

தகவல் கேட்டு விண்ணப்பம் செய்வோர் ஒரு விண்ணப்பத்தில் ஒரு பொருள் குறித்த விவரங்களை மட்டுமே கேட்க வேண்டும். தகவல் கோரும் விண்ணப்பம் என்பது 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.

விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களைத் திரட்டுவதற்காக ஏதேனும் இயந்திரங்களைப் பயன்படுத்த நேரிட்டால், அதற்கான செலவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரிடமிருந்து வசூல் செய்யப்படும்.

தபால் செலவு ரூ.10-க்கு அதிகமானால், கூடுதல் செலவுத் தொகையை விண்ணப்பதாரர்தான் செலுத்த வேண்டும்.

மேல் முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் உண்மையானவை என்பது தகுதியுடைய நபர்களால் சான்றளிக்கப்பட வேண்டும்.

மேல் முறையீட்டு மனு ஏற்க தகுதியில்லாத நிலையில் உள்ளது என சம்பந்தப்பட்ட ஆணையம் கருதினால், மனுதாரரை மட்டும் அழைத்து விசாரித்து, மனுவை நிராகரிக்கலாம்.

முதல் மேல்முறையீட்டு மனுவின் மீதான முடிவு தெரிந்த 45 நாள்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு செய்யப்பட்டாக வேண்டும்.

No comments:

Post a Comment