Sunday, November 18, 2012

தகவல் உரிமை சட்டம் : தமிழகத்தில் விழிப்புணர்வு இல்லை

 



தமிழ்நாட்டில் பொது மக்களிடையே தகவல் அறியும் சட்டம் குறித்த விழிப்புனர்வு போதுமான தாக இல்i என்று மாநில தகவல் ஆணையர் கே.எஸ். ஸ்ரீபதி கூறினார்.சென்னையில் மத்திய தகவல் ஒளிப்பரப்பு அமைச் சகத்தின் நாடக பிரிவு சார் பில் வியாழனன்று (நவ.15) தகவல் அறியும் சட்டம் குறித்து நாடக கலைஞர்க ளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமை துவக்கி வைத்துப்பேசிய அவர், இச்சட்டம் அறிமுகமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இச் சட்டத்தின் கீழ் மாநிலத் தில் பொதுமக்கள் பல தக வல்களை கேட்டறிந்து பயன் பெற்று வருகிறார்கள். ஆனால் சிலர் இந்த சட்டத் தின் கீழ தவறான தகவல் களை கேட்டு நேரத்தை வீணடிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.தகவல் அறியும் உரிமை சட்டம் எதற்காக என்பதை கூட இன்னும் பெரும் பாலான மக்களுக்கு தெரியா மல் உள்ளது என்று கூறிய அவர் இதுகுறித்த சம்மந்த பட்ட துறைகள் மக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்த திட் டத்தை மக்களிடையே கொண்டு செல்லும் வகை யில் நவ. 19 முதல் 30 வரை தமிழகத்தில் விழுப்புரம், நாமக்கல், வேலூர், கிருஷ்ண கிரி, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர், நாகப்பட்டி னம், பெரம்பலூர், திருப் பூர், திருவண்ணாமலை, தர்மபுரி, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புனர்வு முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதா கவும் ஸ்ரீபதி கூறினார்.இந்த பயிற்சி பட்டறை யில் தமிழக அரசின் முதன் மைசெயலர் எம்.குற்றலிங் கம், பத்திரிகை தகவல் அலு வலக கூடுதல் தலைமை இயக்குநர் கே.எம். ரவீந் திரன், மத்திய அரசின் நாட கம் மற்றும் பாடல் பிரிவின் இயக்குநர் எம். ராஜாமன் னார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2 comments:

சேக்கனா M. நிஜாம் said...

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – RTI


1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் [ PIO ] பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி [ இவை இரண்டும் கட்டாயமில்லை ] ஆகியவை இடம்பெற வேண்டும்.

3. மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு அதன் ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டையும் பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்து கொள்ளலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.

வலிப்போக்கன் said...

விழிப்புணர்வை பெறமுடியாதபடிக்கு தகவல் அலுவலர்கள் விழியை பிதுங்க வைத்துவிடுகிறார்கள்- என்அனுபவம்.

Post a Comment