Tuesday, April 2, 2013

பிரதமர் அலுவலகம் கேட்க கூடாத கேள்வி -ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் எதற்காக தகவல் கேட்கிறீர்கள்

ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் எதற்காக தகவல் கேட்கிறீர்கள் என்று பிரதமர் அலுவலகம் கேள்வி கேட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான விமானப்படை முன்னாள் அதிகாரி லோகேஷ் பத்ரா பிரதமர் அலுவலகத்தில் தகவல் கேட்டு மனு ஒன்றை அளித்தார். அதில், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி எந்தெந்த தகவல்கள், ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது, டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை அவர் கேட்டிருந்தார்.  

ஆனால், அந்த தகவலை பிரதமர் அலுவலக பொது தகவல் அதிகாரி ரிஸ்வி தர மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து லோகேஷ் பத்ரா மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த மேல் முறையீட்டு அதிகாரியான கிரிஷண் குமார் தகவல்களை 15 நாட்களுக்கு தர ரிஸ்விக்கு உத்தரவிட்டார். இந்த முறை தனது பதிலில், ''நீங்கள் எதற்காக இந்த தகவல்களை கேட்கிறீர்கள். அது உங்களுக்கு எந்த வகையில் பயன் அளிக்கும் என்று விளக்குங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முன்னாள் தலைமை தகவல் ஆணையர் ஏ.என்.திவாரி கூறுகையில், ''தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்ட தகவல்களை தர வேண்டியது மட்டுமே பொது தகவல் அதிகாரியின் கடமை. அது ரகசியமான தகவல் என்றால் மட்டுமே தர மறுக்கலாம். எதற்காக தகவல் கேட்கிறீர்கள் என்று பதில் கேள்வி கேட்க அதிகாரம் இல்லை. இதற்காக பொது தகவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கலாம்'' என்றார். 

நன்றி தினகரன்

No comments:

Post a Comment