Tuesday, April 2, 2013

தகவல்பெறும் உரிமை சட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் நகல்களை பெறலாம்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களின் நகல்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதற்காக அரசு உத்தரவு பிறப்பிக்கப்படாததால் விடைத்தாள்களின் நகல்கள் கொடுக்கப்படுவதில்லை.
தகவல்பெறும் உரிமை சட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் நகல்களை பெறலாம்ஆனால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் நகல்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்துடன் ரூ.10 நீதிமன்றவில்லை, ஒரு பக்கத்துக்கு ரூ.2 என்ற அளவில் கட்டணத்தை செலுத்தினால் போதும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 30 நாட்களுக்குள் விடைத்தாள்களின் நகல்கள் கொடுக்கப்பட வேண்டும்.
நகல்களை தராவிட்டால் தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்து அவற்றை பெறலாம். ஏற்கனவே ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் நகல்களை வழங்கும்படி கடந்த 2008-ம் ஆண்டு பள்ளி கல்வித்துறையிடம் கேட்டிருந்தார். விடைத்தாள்களை வழங்க அரசு உத்தரவு இல்லை என்று அலுவலர் தெரிவித்தார்.
இதை விசாரித்த தகவல் ஆணையம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாரருக்கு விடைத்தாள் நகல்களை வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்களை தகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற வழி வகை செய்துள்ளது. 

No comments:

Post a Comment