Wednesday, September 29, 2010

தெருவிளக்கு அரியப்படுகிறதா அறியும் உரிமை? செப்.28 : அறிந்து கொள்வதற்கான உரிமைநாள்

“ஒன்றைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதில் வெட்கப்படுவதற்கு ஏதுமில்லை; தெரிந்துகொள்ள முயலாமல் இருப்பதுதான் வெட்கப்பட வேண்டியது.” -இது ஒரு ரஷ்யப் பழமொழி.

எதையும் தெரிந்துகொள்ளும் குறுகுறுப்புதான் மனித சமுதாய வளர்ச்சிக்கே அடிப்படை. நம் ஆதித்தாத்திகளும் தாத்தன்களும் ஏன் விடிகிறது, ஏன் இருட்டுகிறது, ஏன் மழை பொழிகிறது, ஏன் வெயில் கொளுத்துகிறது என்றெல்லாம் துருவி துருவி, தெரிந்துகொள்ள முயலாமல் இருந்திருப்பார்களானால் மானுடப் பரிணா மத்தின் வளர்ச்சி இன்றும் கூட இயற்கை நிகழ்வுகளுக்கு அஞ்சியஞ்சிக் காடுகளில் ஓடிக்கொண்டிருப்பதாகவே தேங்கிப்போயிருக்கும்.

ஆகவேதான் அறிந்து கொள்வது என்பது மனித நாகரீகக்கூறாக மட்டுமல்லா மல், அடிப்படை மனித உரி மையாகவும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. நீண்ட நெடும் போராட்டங்களின் வெற்றியா கவே இந்த அங்கீகாரம் கிடைத் தது. ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிரான சவால்கள் மேலோங்குகிற போதெல்லாம், தங்களுடைய அதிகா ரத்தை நிலைநாட்ட ஒடுக்குமுறையில் இறங்குகையில் முதலில் கைவைப்பது குடிமக்களின் இந்த உரிமையில்தான். இந் தியாவில் இந்திராகாந்தியின் அவசரநிலை ஆட்சிக்காலத்தில், மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள ஒரு அதிகாரி நினைத் தால் கூட பத்திரிகைகளில் குறிப்பிட்ட செய்திகள் வெளிவராமல் தடுக்க முடிந்தது என்பதை மறக்க முடியுமா என்ன?

அப்படி அவசரநிலை ஆட்சி என ஒன்று இல்லாத காலத்திலும் கூட, அரசாங்க ரகசியக் காப்புச் சட்டம் என்பது போன்ற பல பெயர்களில் பல தகவல்கள் மறைக்கப்படுவ துண்டு. “ஜனநாயகத்தில் மக்கள்தான் எசமானர்கள்” என்ற கவர்ச்சிகரமான சொல்லாடல்கள் இருந்தாலும், நடைமுறை யில் அந்த எசமானர்களுக்குத் தெரியாம லேதான் பல நடவடிக்கைகள் எடுக்கப்படு கின்றன. உலகம் முழுவதுமே இப்படியாக இருந்த நிலையில்தான் தகவல்களை அறி வது ஒரு உரிமை என்ற முழக்கத்தோடு போராட்ட இயக்கங்கள் வெடித்தன. அந்த வெடிப்பு, அந்த உரிமையை ஐ.நா. சபை அங்கீகரிக்கவும், அதன் உறுப்பு நாடுகள் இதற்கான சட்டம் கொண்டு வருமாறு தீர்மா னம் நிறைவேற்றவும் வழிவகுத்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தக் கவைக்கும் முயற்சியாக, ஒவ்வொரு ஆண் டும் செப்டம்பர் 28 அன்று “அறிந்து கொள்வதற்கான உரிமை நாள்” என்று அனுசரிக்கப்படுகிறது. பல்கேரியா நாட்டின் சோஃபியா நகரில் 2002-ம் ஆண்டு இதே நாளில் நடைபெற்ற பன்னாட்டுக் கூட்டத் தில், உலகந்தழுவிய அளவில் தகவல் சுதந் திரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நாளாகக் கடைப்பிடிக்க முடிவுசெய்யப்பட் டது.

தகவல் பெறுவதற்கான வாய்ப்பு ஒவ் வொருவரின் உரிமை; தகவல் அளிப்பதே அடிப்படை விதியாக இருக்க வேண்டும், ரகசியம் என்பது விதிவிலக்காகவே இருக்க வேண்டும்; பொதுமக்கள் சார்ந்த அனைத்து அரசு அமைப்புகளுக்கும் இது பொருந்தும்; தகவல் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமையாகவும், விரைவாகவும், இலவசமா கவும் இருக்க வேண்டும்; வேண்டுகோள் விடுப்போருக்கு உதவுவது அதிகாரிகளின் கடமை; தகவல் மறுக்கப்படுமானால் நியாய மான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண் டும்; ரகசியம் காக்கப்படுவதில் பொதுநல னுக்கே முன்னுரிமை; ஒரு பாதகமான முடிவு எடுக்கப்படுகிறது என்றால் மேல்முறையீடு செய்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு; அரசு அமைப்புகள் மையமான தகவல்களை முனைப்புடன் வெளியிட வேண்டும்; ஒரு சுதந்திரமான அமைப்பி னால் இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்... ஆகிய இந்த அடிப்படைக் கொள்கைகளை இந்த நாளில் மக்களி டையே எடுத்துச் செல்லவும் முடிவு செய்யப் பட்டது.

இந்தியாவில் நடந்த போராட்ட இயக் கத்தின் வெற்றியாக 2005ம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த வெற்றி அவ்வ ளவு எளிதில் வந்துவிடவில்லை. சட்டப்பூர்வ அதிகாரம் ஏதுமற்ற ஏற்பாடாக மாற்றுவதற் கெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் முயன் றார்கள். பல துறைகளை இந்தச் சட்டத்திற்கு உட்படாததாக அறிவிக்கவும், ஒரு நீர்த்துப் போன சட்டமாக மாற்றவும் அதிகார வர்க்க மும் பல வழிகளைக் கையாண்டது. ஆயி னும், இடதுசாரிகள் ஆதரவோடுதான் ஆட்சி நடந்தாக வேண்டும் என்ற நிலையில் இருந்த ‘முதலாம்’ ஐமுகூட்டணி அரசு, ஒரேயடியாக நீர்த்துப்போகச் செய்ய முடியாமல் தற் போதுள்ள சட்டத்தைக் கொண்டு வந்தது.

அப்படியும் - பாதுகாப்புத்துறை, உளவுத் துறை போன்றவை இந்தச் சட்டத்தின் கையில் அகப்படாமல் விலக்கிவைக்கப்பட் டுள்ளன. அண்மையில் உச்சநீதிமன்றம் தனக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று சொல்ல, அதெல்லாம் பொருந்தும் என்று தில்லி உயர்நீதிமன்றம் அறிவித்த சுவை யான நிகழ்ச்சியும் நடந்தது.

சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப் பட்ட தேசிய தகவல் உரிமை ஆணையம், மாநில தகவல் ஆணையம் ஆகியவற்றிற்குப் போதுமான ஊழியர்கள் இல்லை என்பது போன்ற பிரச்சனைகள் இந்த ஆணையங் கள் முறையாகவும், வீரியமாகவும் செயல் படுவதற்கு முட்டுக்கட்டைகளாக உள்ளன. இதனை மனித உரிமை இயக்கங்கள் பல முறை சுட்டிக்காட்டியும் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

சட்டப்படி அரசு அலுவலகங்களில் தக வல் அலுவலர்கள் என நியமிக்கப்பட்டிருந் தாலும், அவர்களுக்கு சட்டம் பற்றிய போதிய பயிற்சி இல்லை. ஆகவே, பொதுமக்க ளிடமிருந்தோ, அமைப்புகளிடமி ருந்தோ தகவல்கள் கேட்டு வரும் விண்ணப்பங்களுக்கு பதில ளிக்காமலே விடுவது என்பது சர்வசாதாரணமாக நடை பெறுகிறது. எப்படிப்பட்ட தக வல்களை தெரிவிக்கலாம், அல்லது தெரிவிக்கக் கூடாது என்பதை அவரவர் புரிதலுக்கு ஏற்ப முடிவு செய் கிறார்கள். சில இடங்களில், குறிப்பிட்ட தகவல்கள் சட்டப்படி தெரிவிக்க வேண்டியவையாக இருந் தாலும் கூட, உயரதிகாரிகள் அல்லது அந்த உண்மைகள் தெரியக்கூடாது என்று விரும் புகிற சில சக்திகளின் நிர்ப்பந்தங்களால் அந் தத் தகவல்களை மறைப்பது, இழுத்தடிப்பது போன்ற விளையாட்டுகளும் நடக்கின்றன. தனிப்பட்ட ஆர்வத்துடன் இந்தச் சட்டத்தின் நோக்கங்களைப் படித்துப் புரிந்துகொண்டு ஈடுபாட்டுடன் அந்த மேசைகளில் அமர்ந் திருப்போர் மட்டுமே ஒரு கடமை உணர்வு டன் தகவல்களைத் தெரிவிக்கிறார்கள். வழக்கம்போல் அப்படிப்பட்டவர்களின் எண் ணிக்கை குறைவு.

பல இடங்களில், வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கே, தகவல் அலுவலர்களாகவும் பொறுப்பு தரப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் பணிச்சுமையின் காரணமாக, பெரிதும் அடிபடுவது தகவல் தெரிவிக்கும் அலுவல் தான் என்று இதற்காக அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். “தக வல் ஆணையத்தின் ஆணைகளை, பல் வேறு அலுவலகங்களின் தகவல் அலுவலர் கள் மதிப்பதில்லை; அந்த ஆணைகளை எதிர்த்து வழக்குப் போடுவதும் நடக்கிறது. தகவல் தர மறுத்த ஒரு அலுவலரை ஆணை யம் கடுமையாக விமர்சித்து கடிதம் எழுதி யது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவருக்கு அபராதம் விதித்து ஆணை வந்தபோது அவர் குறிப்பிட்ட தக வலைத் தர முன்வந்தார்! தன்னைப் பற்றிய விமர்சனத்திற்குக் கவலைப்படாமல், பணம் போய்விடுமே என்ற கவலையுடன் அவர் நடந்துகொண்டது எந்த அளவுக்கு இப்படிப் பட்ட அலுவலர்களுக்குப் பொறுப்புணர்வு வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்ற எண்ணத் தைத்தான் ஏற்படுத்தியது,” என்றார் அப்ப டிப்படியேறி இறங்கச் சளைக்காத ஒரு செய் தியாளர்.

இப்படிப்பட்ட நிலையில், மாநிலத் தகவல் ஆணையத்தில் நான்கைந்து முறை மேல் முறையீடு செய்தாக வேண்டிய நிலை உள் ளது என்று தமிழ்நாடு தகவல் உரிமைக்கான பிரச்சார அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறி னர். தகவல் அலுவலர்கள் பற்றிய விவரங்கள் ஆணைய அலுவலகத்தில் வைக்கப்படாதது, அவ்வப்போது ஆணையமே மக்களுக்காக சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கையேடு களை வெளியிட வேண்டும் என்பது நடை முறைப்படுத்தப்படவில்லை என்பன போன்ற குறைபாடுகளையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

பெரிய நகரங்களிலாவது ஊடக வெளிச் சம் உடனடியாகப் பாய்வதால் இந்தச் சட்டத் தின் பலன் மக்களுக்கு ஓரளவுக்காவது கிடைக்கிறது. சிறிய ஊர்களிலும், கிராமங் களிலும் சட்டத்தின் துணையை நாடுவோர் மதிக்கப்படுவதே இல்லை. அண்மையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராம ஊராட்சிக்கு, ஊரில் தொடங்கப்பட்ட பல மேம்பாட்டுத் திட்டங்களின் கதி என்ன என்று கேட்டு கடிதம் அனுப்பிய ஒரு இளை ஞர், அந்த ஊராட்சித் தலைவரின் ஆட்க ளால் தாக்கப்பட்ட நிகழ்ச்சி ஊடகங்களில் வெளியானது. இப்படித் தாக்குவதும், மிரட்டு வதும் பல இடங்களில் நடப்பதாகக் கூறப்படு கிறது.

இந்தச் சட்டம் குறித்து இன்னும் பொது மக்களுக்கு முழுமையாகத் தெரியாமல் இருக்கிறது. அப்படித் தெரியாமல் இருப்பதே நல்லது என்று ஆட்சி பீடத்தில் இருப்போரும், அதிகார வர்க்கத்தினரும் நினைக்கிறார் களோ?, நாடு முழுவதும் இவர்களைப் பயன் படுத்தி ஆதாயம் அடைகிற பெரியதொரு சுய நலக் கூட்டம் அதைத்தான் விரும்புகிறதோ?

அப்படியானால், மக்களின் அடிப்படையான அறியும் உரிமை அரிக்கப்படுகிறது என்றே அர்த்தம். அந்த அரிமானத்தைத் தடுக்கும் ஆற்றல் மக்கள் சக்திக்குத்தான் இருக்கிறது. அந்த சக்தியைத் தட்டியெழுப்பிட, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை எளிய மக்களிடம் வலிமையாக எடுத்துச் சென்றாக வேண்டும்.

Wednesday, September 15, 2010

கோடீஸ்வரர்களின் அமைச்சரவை


மத்திய அரசில் அதிக சொத்து உள்ள அமைச்சர்கள் பட்டியலில் பிரபுல்படேல் முதலிடத்திலும் அதையடுத்து ஜோதிராவ் சிந்தியாவும் உள்ளனர். இந்த இருவருக்கும்

ரூ.25 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ரூ.10.5 கோடி சொத்து உள்ளது.

மத்திய அரசில் உள்ள அமைச்சர்களின் சொத்து பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் வரிசையில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சரான பிரபுல்படேல் முதலிடத்தில் உள்ளார். அவரது பெயரில் ரூ.29.62 கோடி சொத்து உள்ளது. அவரது மனைவி வர்ஷா படேல் பெயரில் ரூ.37.7 கோடி சொத்து உள்ளது.

இந்த தம்பதிக்கு ரூ.18லட்சத்திற்கான பணம் பல்வேறு வங்கி கணக்குகளில் உள்ளன. இதைத் தவிர அமைச்சர் படேலின் பெயரில் ரூ.67 லட்சத்திற்கு நகைகள் உள்ளன. அவரது மனைவி நகைகள் மதிப்பு ரூ.1.3 கோடியாகும்.

இவரது மகனுக்கு ரூ.1.3 கோடி மதிப்பில் நகைகள் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி பிரபுல் படேலின் சொத்து மதிப்பு இதுவாகும். அமைச்சர் தனக்கோ அல்லது தனது குடும்பத்தினர் வசம் உள்ள வாகனங்கள் குறித்து தெரிவிக்கவில்லை.

இவரையடுத்து சொத்து மதிப்பில் 2ம் நிலையில் உள்ள வர்த்தக துறை இணையமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஏறக்குறைய ரூ.25 கோடி சொத்துக்கள் உள்ளன. இவருக்கு ரூ.5.7 கோடிக்கு மேல் நகைகள் உள்ளன. இவர் இந்திய மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களில் ரூ.16 கோடி மதிப்பில் முதலீடு செய்துள்ளார். நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பெயரில் ரூ.1 கோடி வரை சொத்து உள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ.1.6 கோடிக்கு சொத்து உள்ளது.

வேளாண் துறை அமைச்சர் சரத் பவாருக்கு ரூ.6.5 கோடி சொத்து உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ரூ.10.5கோடி சொத்து உள்ளது. அவரது மனைவி நளினிக்கு ரூ.8.5 கோடி மதிப்பு சொத்து உள்ளது. ப.சிதம்பரத்திற்கு கர்நாடகத்தில் உள்ள குடகு பகுதியில் ரூ.28.9 லட்சம் மதிப்புள்ள காபி எஸ்டேட் உள்ளது. ப.சிதம்பரம் வைத்திருக்கும் தொலைபேசி மதிப்பு ரூ.38 ஆயிரம் ஆகும். அவரது மனைவி தொலைபேசியின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தமது பெயரில் ரூ.1லட்சம் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். அவரது மனைவி எலிசபெத் பெயரில் ரூ.15லட்சம் மதிப்புள்ள வீடும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிலம் மற்றும் வங்கி கணக்கு களில் ரூ.3.19 லட்சம் பணம் உள்ளது. ஏ.கே. அந்தோணி மாநிலங் களவை உறுப்பினராக உள்ளார்.

மத்திய அமைச்சர்கள் சொத்து விவரம் குறித்து, சமூக ஆர்வலர் எஸ்.சி.அகர்வால் தகவல் உரிமை சட்டத்தில் கேட்ட போது பிரதமர் அலுவலகம், அமைச்சர்களின் இந்த சொத்து விவரங்களை வெளியிட்டது.

தொடரும் வன்முறைகள் தகவல் கேட்டால் தன்டனைகள் கல்லூரி மாணவர் கிராமப் பஞ்சாயத்து பற்றி தகவல் கேட்டதால் வீடு புகுந்து தாக்கப்பட்டார்

Please click on the following link to read the item: