Tuesday, December 21, 2010

தகவல் அறியும் சட்டத்தை பாதுகாப்போம்

Right to Information Act (RTI) என்ற தகவல் அறியும் சட்டம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

அதன் குரல் வளையை நெரிக்க அரசு முயல்வதாக தெரிகிறது.
குறிப்பாக விண்ணப்பங்கள் 250 வார்த்தைகளுக்குள் இருக்கணுமாம்.

250 வார்த்தைகளில் எப்படி நாம் விரும்பும் விவரம் கேட்டபது

இதைத் தவிர இன்னும் பல நெருக்கடிகள் நிறைவேத்த இருக்காம். விவரங்களை இங்கே க்ளிக்கி தெரிந்து கொண்டு பெட்டிஷனில் கையெழுத்து இடவும்.

பரப்பவும்.

நன்றி

http://www.petitiononline.com/rtisave/

முக்கிய திருத்தங்கள்:

தகவல் கேட்டு விண்ணப்பம் செய்வோர் ஒரு விண்ணப்பத்தில் ஒரு பொருள் குறித்த விவரங்களை மட்டுமே கேட்க வேண்டும். தகவல் கோரும் விண்ணப்பம் என்பது 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.

விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களைத் திரட்டுவதற்காக ஏதேனும் இயந்திரங்களைப் பயன்படுத்த நேரிட்டால், அதற்கான செலவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரிடமிருந்து வசூல் செய்யப்படும்.

தபால் செலவு ரூ.10-க்கு அதிகமானால், கூடுதல் செலவுத் தொகையை விண்ணப்பதாரர்தான் செலுத்த வேண்டும்.

மேல் முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் உண்மையானவை என்பது தகுதியுடைய நபர்களால் சான்றளிக்கப்பட வேண்டும்.

மேல் முறையீட்டு மனு ஏற்க தகுதியில்லாத நிலையில் உள்ளது என சம்பந்தப்பட்ட ஆணையம் கருதினால், மனுதாரரை மட்டும் அழைத்து விசாரித்து, மனுவை நிராகரிக்கலாம்.

முதல் மேல்முறையீட்டு மனுவின் மீதான முடிவு தெரிந்த 45 நாள்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு செய்யப்பட்டாக வேண்டும்.

Friday, December 17, 2010

இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய தகவல் ஆணை யம் ரூ.45,000 அபராதம்.


காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி யெழுப்பியிருந்த விவகா ரத்தில் தகுந்த பதிலளிக்காத இந்திய ஒலிம்பிக் சங்கத் திற்கு மத்திய தகவல் ஆணை யம் ரூ.45,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.


தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் கீழ் செய் யப்பட்ட விண்ணப்பத் திற்கு 100 நாட்களுக்கு மேல் கடந்த பிறகும் தகவல் அளிக்கத்தவறியதால் மத்திய தகவல் ஆணையர் எம்.எல்.வர்மா ரூ. 25,000 அபராதம் விதித்தார்.

மற்றொரு வழக்கில் இந்திய ஒலிம்பிக் சங்கம் 80 நாட்களுக்கு மேலாகத் தாமதம் செய்த காரணத் தால் ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு சாவு மணி அடிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்


2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்திய மக்களுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்று போற்றப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் துறைகள் தொடர்பான தகவல்கள், செயல்பாடுகளை அறிய இந்த சட்டம் பேருதவியாக உள்ளது. மேலும், அரசுத் துறைகளில் நடைபெறும் பல ஊழல்களையும் இந்த சட்டம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர மத்திய பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிக்கை டிசம்பர் 10-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தத் திருத்தங்கள் தொடர்பான கருத்துகளை டிசம்பர் 27-ம் தேதிக்குள் usrti-​dopt​@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்ப வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய திருத்தங்கள்: தகவல் கேட்டு விண்ணப்பம் செய்வோர் ஒரு விண்ணப்பத்தில் ஒரு பொருள் குறித்த விவரங்களை மட்டுமே கேட்க வேண்டும். தகவல் கோரும் விண்ணப்பம் என்பது 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.

விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களைத் திரட்டுவதற்காக ஏதேனும் இயந்திரங்களைப் பயன்படுத்த நேரிட்டால், அதற்கான செலவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரிடமிருந்து வசூல் செய்யப்படும்.

தபால் செலவு ரூ.10-க்கு அதிகமானால், கூடுதல் செலவுத் தொகையை விண்ணப்பதாரர்தான் செலுத்த வேண்டும்.

மேல் முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் உண்மையானவை என்பது தகுதியுடைய நபர்களால் சான்றளிக்கப்பட வேண்டும்.

மேல் முறையீட்டு மனு ஏற்க தகுதியில்லாத நிலையில் உள்ளது என சம்பந்தப்பட்ட ஆணையம் கருதினால், மனுதாரரை மட்டும் அழைத்து விசாரித்து, மனுவை நிராகரிக்கலாம்.

முதல் மேல்முறையீட்டு மனுவின் மீதான முடிவு தெரிந்த 45 நாள்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு செய்யப்பட்டாக வேண்டும்.

முடக்க முயற்சி: இந்தத் திருத்தங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சிதைத்து, சட்டத்தையே முடக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படுவதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட ஒரு நிகழ்வு தொடர்பான தகவல்களைப் பெற ஒரு கேள்வி மட்டும் கேட்டால், போதுமான தகவல்கள் கிடைக்காது. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்பது அவசியமாகிறது. அவ்வாறு பல கேள்விகளை உள்ளடக்கிய விண்ணப்பங்களை, பல பொருள்கள் குறித்து கேள்வி கேட்பதாகக் கூறி, நிராகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

மேலும், 250 வார்த்தைகளுக்குள் தகவல்களைக் கோர வேண்டும் என்பதும் பொருத்தமில்லாதது என்றும், பெரும்பாலான தகவல் கோரும் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தத் திருத்தம் கொண்டு காங்கிரஸ் கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ளது தொடர்ந்து ஊழல் வழக்குகள் வெளியில் சிந்து விடுவதால் கலவரப்பட்டு அந்த சட்டத்தை மரணக்குழியில் தள்ள பார்க்கிறது மத்திய அரசு உடனே மேற்கண்ட மிண் அஞ்சல் முகவரிக்கு பதிவர்கள் அணைவரும் தங்கள் கருத்துகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

மனுதாரர் மிரட்டப்பட்டு, விசாரணையில் ஆஜராகாவிட்டாலும் கூட, அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரித்து, முடிவை அறிவிக்கும் நடைமுறை இப்போது உள்ளது.

மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றால், விசாரணை நடைபெறத் தேவையில்லை என்று இப்போது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆதிக்க சக்திகளால் மனுதாரர்கள் மிரட்டப்பட்டு, மனுக்களை வாபஸ் பெறச் செய்யும் சம்பவங்கள் இனி நிறைய நடைபெறலாம்.

முதல் மேல்முறையீட்டு மனு மீதான முடிவு தெரிந்து, இரண்டாவது மேல் முறையீடு செய்ய இப்போது 90 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தை 45 நாள்களாக குறைப்பதன் மூலம் மேல் முறையீட்டுக்கான வாய்ப்புகளை அரசு குறைக்கிறது.

எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில்தான் இப்போதைய திருத்தங்கள் உள்ளன .

Tuesday, December 14, 2010

புதிய தலைமை தகவல் ஆணையர் நியமனம்


மத்திய தகவல் ஆணையத்தின் புதிய தலைவராக சத்யானந்த மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதுள்ள ஏ.என்.திவாரியின் தலைமை தகவல் ஆணையர் பதவிக்காலம் டிசம்பர் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. மத்தியப் பிரதேசத்தின் 1973-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சத்யானந்த மிஸ்ரா டிசம்பர் 20-ம் தேதி பதவியேற்பார் எனத் தகவல் தெரிவித்தன. தகவல் ஆணையராக மிஸ்ராவை நியமிக்கும் முடிவு பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டது

Shri Satyananda Mishra

Information Commissioner
Room No.8, Club Building,
Old JNU Campus
New Delhi - 110 067.
Phone:- 011 - 26101592
E-mail :- s.mishra@nic.in



Curriculum Vitae

NameSatyananda Mishra
Date of Birth17th January 1949
Education qualificationMA in English (Utkal)
M Phil in Public Administration (Punjab)
M Sc in Policy Planning for Developing Countries (LSE)
Experience

Joined the Indian Administrative Service in 1973 after a brief stint in the State Bank of India as a Probationary Officer. Spent the first two years in training and the next 10 years in various field level postings in the districts of Madhya Pradesh. These included postings as the Collector and District Magistrate in two districts for a period of about 4 years.

Since moving out of the field in 1984, have been working on a variety of assignments, a gist of which is given below:


(1) Culture

Worked for nearly 7 years in the State and Central Government in the Department of Culture. This included formulation of cultural policy and Implementation of a variety of projects dealing with promotion and conservation of arts, heritage and cultural diversities. The assignments included Secretary of the Department of Culture in the State of Madhya Pradesh, Managing Director of the Madhya Pradesh Film Development Corporation, Secretary of the Bharat Bhawan Trust, highly reputed multi Art Centre and Joint Secretary in the Department of Culture, Government of India and was in three different stints, viz. from 1984 to 1987, from 1990-1992 and from 1993-1995.


(2) Information & Public Relations

Worked for more than two years both as Secretary and Director of Publications in Government of Madhya Pradesh. Responsibilities included formulating the Information Policy of the Government and disseminating news and information for raising awareness among the people on issues like literacy, primary health care, environmental conservation and empowerment of women.


(3) Urban Development, Town Planning, Housing, Urban & Rural Water Supply and Infrastructure

Worked for nearly nine years in various posts under the State Government of Madhya Pradesh in all these areas. In four different stints, as Chairman of the Special Area Development Authority, Korba, a sprawling mining and industrial township, Housing Commissioner, Madhya Pradesh Housing Board, Principal Secretary to the Department of Housing and Environment, Public Health Engineering and Public Works, the responsibilities spanned the entire gamut of urban planning, provision of infrastructure such as roads, sewage and drinking water, policy control, conservation and habitats, etc.


(4) Small scale industry

Worked in two stints under the State and Central Government, worked for more than three years in the area of development of small and medium enterprises, marketing and export of SME products. The assignment included Managing Director of the State Small Industries Development Corporation and Development Commissioner, Small Scale industries in the Government of India.


(5) Personnel and Human Resources Administration

Worked in two stints in Government of India in the Ministry of Personnel for more than two years. The responsibilities include formulating the human resource development policy for the Government employees and also recruitment, training and other welfare measures for them. Initiatives being undertaken by the Department include promotion of greater transparency and accountability among Government employees in delivery of services.

Monday, December 13, 2010

இந்தியாவில் பாதி பேர் லஞ்சம் கொடுக்கின்றனர்: ஆய்வில் தகவல்




இந்தியாவில் 54 சதவீதம் பேர் கடந்த ஓராண்டில் தங்களது வேலைகளை முடிப்பதற்கு லஞ்சம் கொடுத்ததாக “டிரான்ஸபரன்ஸி இன்டர்நேஷனல்” என்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

உலக நாடுகளில் ஊழல் தொடர்பான ஆய்வை இந்த அமைப்பு நடத்தியது. கல்வி, நீதி, மருத்துவம், காவல், பத்திரப் பதிவு உள்ளிட்ட 9 துறைகளில் கடந்த 12 மாதங்களில் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித் தீர்களா என்ற கேள்வி மக்களிடம் கேட்கப்பட்டது. இதுபோன்ற பல் வேறு கேள்விகளுக்கு மக்கள் தந்த பதில்களின் அடிப்படையில் ஊழல் மலிந்த நாடுகளின் பட்டியல் தயா ரிக்கப்பட்டது. ஊழல் எதிர்ப்பு தினமான கடந்த 9-ம் தேதி இந்தப் பட்டியலைக் கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

86 நாடுகளைக் கொண்ட பட்டியலில் லஞ்சம் கொடுத்ததாக இந்தியாவில் 54 சதவீதம் பேர் பதிலளித்திருந்தனர். உலக அளவில் இந்த ஆய்வுக்காக 91 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவர்.

Tuesday, November 23, 2010

லஞ்ச ஒழிப்பு ஆணையராக குற்றவாளியா? உச்சநீதிமன்றம் கேள்வி


மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய (சிவிசி) தலைமை ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமித்தது எப்படி? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றவரை இத்தகைய உயரிய பதவிக்கு நியமித்ததன் பின்னணி என்ன? என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்ந்து இரண்டாவது வாரமாக மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பிரதமர் மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டது. இப்போது தலைமை ஆணையர் நியமன விவகாரத்திலும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அரசின் பதிலை அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி, திங்களன்று நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் அளித்தார். அப்போது பேசிய நீதிபதி, இந்த பதிலை பார்க்காமலேயே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது, அதாவது ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அத்தகையவரை இதுபோன்ற மிக முக்கியமான பதவியில் அமர்த்தியது எப்படி என்பது தெரிந்தாக வேண்டும்.

தாமஸ் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு விவரத்தைப் பரிசீலனை செய்த பிறகே அரசின் பதிலை பரிசீலிக்க முடியும் என்று குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாகக் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த ஆவணத்தைப் பரிசீலித்து பின்னர் முடிவு செய்வதாக நீதிபதி கபாடியா கூறினார்.

பி.ஜே. தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பான பதிலை அரசு தாக்கல் செய்தது. அப்போது பி.ஜே. தாமஸ் நியமனத்தில் உரிய தகுதி வரையறைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா? என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அவரது நம்பகத்தன்மை எந்த அளவுக்கு அளவிடப்பட்டது என்றனர். குற்றப் பத்திரிகையில் பெயர் உள்ள ஒருவரை இத்தகைய உயர் பதவிக்கு பரிந்துரைத்தது எவ்விதம் என்பது வியப்பாக உள்ளது என்றனர்.

இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி, பாமாயில் இறக்குமதி ஊழலில் தாமஸýக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இவர் மீது வழக்குத் தொடர அதனால்தான் அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.

யூகத்தின் அடிப்படையில் இந்த வழக்கைப் பார்த்தால், ஒவ்வொரு கட்டத்திலும் அவர் மீது குற்றச்சாட்டு இருப்பதாக வைத்துக் கொள்வோம், அப்படியிருப்பின் அவரை தலைமை ஆணையர் பதவிக்கு எவ்விதம் நியமிக்க முடியும்? அத்தகைய நபர்தான் லஞ்ச ஒழிப்புத்துறையில் சிறப்பாக பணியாற்றுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

ஒவ்வொரு கட்ட விசாரணை குறித்தும் சிபிஐ-யின் விளக்கம் தேவை என்றனர்.

பணியாளர்களுக்கான விதிமுறையில், ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலே அவரது பெயர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படக் கூடாது என்றுள்ளதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

2002-ம் ஆண்டிலிருந்தே இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அப்போதிருந்தே அவரது பெயர் பதவி உயர்வுக்குப் பரிசீலிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் அவரால் ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சிவிசி) எப்படி சிறப்பாக செயலாற்ற முடியும்? அவருக்கே குற்ற உணர்வு, நெருடல் இருக்காதா? என்று நீதிபதிகள் கேட்டனர். இது மிகவும் முக்கியமான வழக்கு. எனவே ஒவ்வொரு கட்டமாக ஆராய்ந்து அதனடிப்படையில் தீர்ப்பு அளிக்கப் போவதாக நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு தகுதியின் அடிப்படையில் ஏற்கப்பட்டதல்ல. இந்த முழு வழக்குமே நம்பகத் தன்மை அடிப்படையிலானது. அனைத்து நடைமுறைகளும் கே.வி. தாமஸ் நியமனத்தில் பின்பற்றப்பட்டுள்ளனவா? என்பதை இந்த நீதிமன்றம் ஆராயும்.

இதுபோன்ற சில குற்றச்சாட்டுகள் கணக்கில் எடுத்துக் கொண்டால், நீதிமன்றங்களின் ஒவ்வொரு நியமனத்தையும் பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்று அட்டர்னி ஜெனரல் பதிலளித்தார். பொதுநல அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் வாஹன்வதி வாதாடினார்.

தாமஸ் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். கேரளத்தில் உணவுத் துறைச் செயலராக கே.வி. தாமஸ் இருந்தபோதுதான் பாமாயில் இறக்குமதி ஊழல் நடைபெற்றது. இதில் அவர் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை கையாள்கிறது. ஆனால் தாமஸ் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையராக உள்ளார்.

மேலும் தொலைத் தொடர்புத்துறைச் செயலராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் இவருக்கும் தொடர்புள்ளது என்று மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் இப்பதவிக்கு தாமûஸ நியமிக்க வேண்டும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் என நிர்பந்தித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தாமஸ் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிவிசி உள்ளிட்ட உயர் பதவிக்கு நியமிக்கப்படுபவரை தேர்வு செய்ய 3 பேரடங்கிய குழு உள்ளது. இந்தக் குழுவில் பெரும்பான்மை பெற்ற ஒருவரே நியமிக்கப்படுவார். அல்லது ஒரு மனதாக தேர்வு செய்யப்படும் நபரே இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஏற்காத நிலையில் தலைமை ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் சட்ட விரோதமானது. இவர் செயல்படக் கூடாது என்றும், இவரது நியமனத்தை சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் என்றும் தன்னார்வ அமைப்புகள் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தன.

Friday, October 15, 2010

மருத்துவக்கல்லூரி பணிநியமனங்களில் முறைகேடு ஆளுநர் மாளிகை, அமைச்சர் தலையீடு அம்பலமானது

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களின் நியமனத்தில் உயர் மட்ட அரசியல் தலையீடுகள் இருந்துள்ளன என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அம்பலமாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின்படி, ஆளுநர் மாளிகை மற்றும் சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் அலுவலகம் போன்றவை சில குறிப்பிட்ட விண்ணப்ப தாரர்கள் பயன்பெறுமாறு தங்கள் செல் வாக்கைப் பயன்படுத்தியுள்ளன என்று தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, கவுரவ வேந்த ரான சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மற்றும் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மற்றும் தேர்வுக்குழுவின் தலைவரான கே. மீர் முஸ்தபா ஹூசைன் ஆகியோர் தங் களது செல்வாக்கினைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆகஸ்ட் 4, 2008 அன்று எம். சாந்தி என் பவரின் விண்ணப்பத்தை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. அந்த விண்ணப்பத்தில் “மாண்பு மிகு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுகாதாரம் மற்றும் குடும்ப சுகாதாரம் பரிந் துரைக்கப்பட்டு முன்மொழியப்பட்ட” என்று பச்சை மையினால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாதம் கழிந்த பின்னர், சாந்தி, பல்கலைக் கழக மானியக்குழு ஒருங்கிணைப்பாளராக பணிநியமனம் செய்யப்பட்டார். இந்த விஷயத் தில் விநோதமாக சாந்தியின் பணிநியமன ஆணை சாந்தியின் முகவரிக்கு அனுப்பப்படா மல் சுகாதாரத்துறை அமைச்சரின் அலுவல கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்கடி தத்தை “முறைப்படி” கையெழுத்திட்டு சுகா தாரத்துறை அமைச்சரின் உதவியாளர் சண் முகம் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதே போன்று, சித்த மருத்துவத் துறை யில் ரீடர் வேலைக்கு டாக்டர் கே.எஸ். உமா வின் விண்ணப்பம் நவம்பர் 21, 2008ல் பெறப் பட்டுள்ளது. டாக்டர் கே.எஸ். உமாவின் விண்ணப்பத்தில் பச்சை மையினால் கையெழுத்திடப்பட்ட குறிப்பு பின்வருமாறு தெரிவிக்கிறது. “ஆளுநர் மாளிகையிலிருந்து தொலைபேசி மூலம் டாக்டர் கே. எஸ்.உமாவின் விண்ணப்பத்தை ரீடர் பதவிக்கு பரிசீலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது”. இதைத்தொடர்ந்து துணைவேந்தர் டாக்டர் கே. மீர் முஸ்தபா ஹூசைன் தலைமையில் ஜனவரி மாதம் 19ம் தேதி கூடிய தேர்வுக் குழு டாக்டர் கே. எஸ். உமாவை ரீடர் பதவியில் நிய மித்து உத்தரவிட்டது.

மற்றொரு சம்பவத்தில், ஆகஸ்ட் 21, 2007 பல்கலைக் கழக தேர்வுக் குழு, சித்த மருத் துவத் துறை விரிவுரையாளர் பணியிடத் திற்கு டாக்டர் ராஜலட்சுமியைப் பரிந்துரை செய்தது. இப்பரிந்துரையை 2007 செப்டம்பர் 21ம் தேதி நிர்வாகக் குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளது. சிறிதுகாலம் கழிந்த பின்னர் டாக்டர் ராஜலட்சுமியின் விண்ணப்பம் காத் திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது. அப்பணியிடத்திற்கு டாக்டர் இ. மணி கண்டன் பரிந்துரைக்கப்பட்டார். அதன்பின் னர் புதிதாக ஒரு லெக்சரர் பணியிடம் உரு வாக்கப்பட்டு டாக்டர் ராஜலட்சுமி பணியில் அமர்த்தப்பட்டார். அப்பணியிடத்திற்கு விளம்பரம் எதுவும் செய்யப்படவில்லை.

ஆதாரங்களோடு பல்கலைக்கழகத் தைத் தொடர்புகொண்டபோது பல்கலைக் கழக அதிகாரிகள் தற்காத்துக்கொள்ளும் விதமாக அனைத்துப் பணியிடங்களும் தகுதியின் அடிப்படையிலேயே நிரப்பப்பட் டது என்று சமாளித்தனர். அனைத்து நடை முறைகளையும் முடித்த பின்னரே பணிகள் நியமனம் செய்யப்பட்டன என்று மூத்த பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார். எனினும், அவரது கூற்றுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை.

ஆகஸ்ட் 4, 2008ல் எம். சாந்தி அனுப்பிய விண்ணப்பத்தில் எந்தப்பணியிடத் திற்கான விண்ணப்பம் என்பது குறிப்பிடப் படவில்லை. விண்ணப்பம் பெற்று ஒரு மாதம் கழிந்த பின்னர்(சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையோடு) பல் கலைக்கழக நிர்வாகக் குழு செப்டம்பர் 26, 2008 பல்கலைக்கழக மானியக் குழு ஒருங் கிணைப்பாளர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கியுள்ளனர். அன்றே 5 பேர் கொண்ட தேர்வுக்குழு கூட்டப்பட்டுள்ளது. அன்று மாலையே நேர்முகத்தேர்வு நடத்தப் பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. குறிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.

தற்காலிக அடிப்படையில் மாதம் ரூ. 9,100 சம்பளத்திற்கு 2008 செப்டம்பர் 29 அன்று அவரது பணிநியமன ஆணை அமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. சாந்தி அக்டோபர் 3, 2008ம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். சாந்தி பணியில் சேர்ந்தபின்னர் பல்கலைக்கழகத்தின் நிர் வாகக்குழு அப்பதவிக்கு ஆட்கள் தேவை என்று ரூ.97,000 செலவில் விளம்பரம் செய் துள்ளது. அச்செலவினம் குறித்து தலைமைத் தணிக்கை அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

துணைவேந்தர் டாக்டர் கே. மீர் முஸ்தபா ஹூசைன் அனைத்து தேர்வுக் குழுவிலும் தலைவராக உள்ளார். தற்போது அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.

நன்றி தீக்கதிர்

Monday, October 11, 2010

ஊழல் எனும் ஊழித்தீ!

வருமான வரி அதிகாரியான மோகன்லால் சர்மா என்பவர் ஒருவரிடமிருந்து ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம்வரை பயணப்பட்டிருக்கும் வழக்கின் விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜுவும், டி.எஸ். தாக்கூரும் வேதனையுடன் வெளியிட்டிருக்கும் கருத்துகள் நாட்டின்மீதும் வருங்காலத்தின்மீதும் அக்கறையுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அன்றாடம் மனதிற்குள் எழுப்பி, விடை கிடைக்காமல் வெந்து புழுங்கும் லஞ்சம் தொடர்பான விவாதம்தான்.

""லஞ்சத்தைக் கட்டுப்படுத்த நமது நாட்டில் எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படுவதில்லை என்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. குறிப்பாக, வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரித் துறைகளில் கையூட்டு இல்லாமல் எந்த வேலையும் நகர்வதே இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசே ஒவ்வொரு வேலைக்கும் இன்னின்ன கையூட்டு வழங்கப்பட வேண்டும் என்று விதிமுறை வகுத்துவிட்டால், எவ்வளவு செலவாகும் என்று குடிமகனுக்குத் தெரியும் என்பதுடன், தேவையற்ற பேரம் பேசுதலையும் தவிர்க்கலாமே'' என்று நாட்டு நிலைமையைக் கேலி செய்யும் விதத்தில் அங்கலாய்த்திருக்கிறார்கள் மேன்மை தாங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாஷிங்டனிலிருந்து வெளியான "வெளிநாட்டுக் கொள்கை' என்கிற ஆய்வு அறிக்கை ஒன்றில் நிர்வாக இயந்திரம் தோல்வி அடைந்துவிட்டிருக்கும் 146 நாடுகளில் இந்தியாவுக்கு 97-வது இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. நிர்வாக இயந்திரத்தின் தோல்விக்கு அடிப்படைக் காரணம் அரசியல் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளான நீதித்துறை, தேர்தல் ஆணையம், தணிக்கை ஆணையம், ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்றவை குறிக்கோள் இழந்து செயலிழக்கப்படுவதுதான்.
இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதற்கு அரசியல் தலைமைதான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். திறமையும், நேர்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு தங்களுக்குச் சாதகமான அதிகாரிகள் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்று அரசியல் தலைமை விழைந்ததால் ஏற்பட்ட நிர்வாகச் சீரழிவின் விளைவுகளைத்தான் நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

சுதந்திரம் பெற்ற ஆரம்பகாலகட்டத்தில் ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்குச் சேவை செய்வதற்கு என்கிற கருத்து கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பின்தள்ளப்பட்டு, மிகக்குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வருமானம் ஈட்ட வழிகோலும் உபாயமாகப் பதவி மாறிவிட்டிருப்பதுதான் இந்த நிலைமைக்குக் காரணம். இல்லையென்றால், நமது மக்கள் பிரதிநிதிகள் கடந்த தேர்தலில் காட்டியிருந்த சொத்து விவரம் அடுத்த தேர்தலில் போட்டியிடும்போது பலமடங்கு அதிகரித்திருப்பது எப்படி?

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப்பணம் மட்டும் சுமார் ரூ.64.56 லட்சம் கோடி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகை உலகிலுள்ள எல்லா நாடுகளின் மொத்த சுவிஸ் வங்கி சேமிப்பையும்விட அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தப் பிரச்னையைப் பற்றி மக்கள் இப்போது கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஓராண்டுக்கு முன்பு அதிர்வுகளை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்னும் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறது. போபர்ஸ் பிரச்னையாகட்டும், பிகார் மாட்டுத்தீவன ஊழலாகட்டும் எதுவுமே முடிவுக்கு வரவில்லை. வரும் என்றும் தோன்றவில்லை. சட்டம் தனது கடமையை நீண்டநாள்களாகச் செய்துகொண்டே இருக்கிறது.

அமெரிக்காவில் கவர்னர் பதவி என்பது நமது முதல்வர் பதவிபோல. கடந்த 5 ஆண்டுகளில், இரண்டு கவர்னர்களும் ஆறு மேலவை மற்றும் மக்களவை உறுப்பினர்களும் ஊழல் குற்றங்களுக்காக 6 முதல் 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார்கள். இவர்களது ஊழல்கள் நமது இந்திய அரசியல்வாதிகளின் ஊழலுடன் ஒப்பிட்டால் வெறும் ஜுஜுப்பி ஊழல்கள். சீனாவில் இதே ஐந்தாண்டு காலகட்டத்தில் ஐந்து பெரிய அதிகாரிகளும், ஒரு மேயரும் விசாரணை நடத்தப்பட்டு ஊழலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சராசரி இந்தியக் குடிமகன் லஞ்சம் கொடுப்பதை ஒரு நடைமுறை வழக்கமாக ஜீரணித்துக் கொண்டுவிட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கையூட்டுப் பெறுவதும், கையூட்டுக் கொடுப்பதும் குற்றம் என்கிற உணர்வே இல்லாமல் மரத்துப் போய்விட்ட நிலைமை. இது அடிமட்டத்திலிருந்து உச்சாணிக் கொம்புவரை, சுவாசிக்கும் காற்றைப்போல இந்தியாவின் எல்லாத் துறைகளிலும் வியாபித்திருக்கிறது என்பதுதான் யதார்த்த நிலைமை.
இங்கே ஊழலுக்காக சிறைத்தண்டனை பெற்றுத் தனது அரசியல் வாழ்வை இழந்த ஒரு அரசியல் தலைவர் உண்டா? ஊழலுக்காகப் பதவி இழந்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்து விடுகிறார்களே, ஏன்? மக்கள் மன்றம் இவர்களை மன்னிக்கிறதே, எதற்காக? ஊழல் குற்றச்சாட்டு ஒருவர்மீது சுமத்தப்பட்டதும் ஆறே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, அது அரசியல்வாதியோ, அதிகாரியோ, அரசு ஊழியரோ யாராக இருந்தாலும் பொதுச் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டாமா? அப்படி எதுவும் நடப்பதில்லையே, ஏன்? வெட்கமே இல்லாமல் லஞ்சப் பணத்தில் சிலர் சுகவாழ்வு வாழ்வதை நாம் பார்த்துச் சகிக்கிறோமே, அது எதனால்?

நாம் ஊழலைச் சகிக்கிறோம். ஆனால், அந்த ஊழல் தீ ஊழித்தீயாக நம்மைத் தகிக்கப் போகிறது என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம். ஊழலுக்கு எதிராக உரத்த குரல் எழுப்பப்படாவிட்டால், ஜனநாயகம் பறிபோய்விடும்.
நம்மை எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்னை ஊழல்தான் என்பதை ஒவ்வொரு இந்தியனும் உணர்ந்தாக வேண்டும்!

Wednesday, September 29, 2010

தெருவிளக்கு அரியப்படுகிறதா அறியும் உரிமை? செப்.28 : அறிந்து கொள்வதற்கான உரிமைநாள்

“ஒன்றைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதில் வெட்கப்படுவதற்கு ஏதுமில்லை; தெரிந்துகொள்ள முயலாமல் இருப்பதுதான் வெட்கப்பட வேண்டியது.” -இது ஒரு ரஷ்யப் பழமொழி.

எதையும் தெரிந்துகொள்ளும் குறுகுறுப்புதான் மனித சமுதாய வளர்ச்சிக்கே அடிப்படை. நம் ஆதித்தாத்திகளும் தாத்தன்களும் ஏன் விடிகிறது, ஏன் இருட்டுகிறது, ஏன் மழை பொழிகிறது, ஏன் வெயில் கொளுத்துகிறது என்றெல்லாம் துருவி துருவி, தெரிந்துகொள்ள முயலாமல் இருந்திருப்பார்களானால் மானுடப் பரிணா மத்தின் வளர்ச்சி இன்றும் கூட இயற்கை நிகழ்வுகளுக்கு அஞ்சியஞ்சிக் காடுகளில் ஓடிக்கொண்டிருப்பதாகவே தேங்கிப்போயிருக்கும்.

ஆகவேதான் அறிந்து கொள்வது என்பது மனித நாகரீகக்கூறாக மட்டுமல்லா மல், அடிப்படை மனித உரி மையாகவும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. நீண்ட நெடும் போராட்டங்களின் வெற்றியா கவே இந்த அங்கீகாரம் கிடைத் தது. ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிரான சவால்கள் மேலோங்குகிற போதெல்லாம், தங்களுடைய அதிகா ரத்தை நிலைநாட்ட ஒடுக்குமுறையில் இறங்குகையில் முதலில் கைவைப்பது குடிமக்களின் இந்த உரிமையில்தான். இந் தியாவில் இந்திராகாந்தியின் அவசரநிலை ஆட்சிக்காலத்தில், மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள ஒரு அதிகாரி நினைத் தால் கூட பத்திரிகைகளில் குறிப்பிட்ட செய்திகள் வெளிவராமல் தடுக்க முடிந்தது என்பதை மறக்க முடியுமா என்ன?

அப்படி அவசரநிலை ஆட்சி என ஒன்று இல்லாத காலத்திலும் கூட, அரசாங்க ரகசியக் காப்புச் சட்டம் என்பது போன்ற பல பெயர்களில் பல தகவல்கள் மறைக்கப்படுவ துண்டு. “ஜனநாயகத்தில் மக்கள்தான் எசமானர்கள்” என்ற கவர்ச்சிகரமான சொல்லாடல்கள் இருந்தாலும், நடைமுறை யில் அந்த எசமானர்களுக்குத் தெரியாம லேதான் பல நடவடிக்கைகள் எடுக்கப்படு கின்றன. உலகம் முழுவதுமே இப்படியாக இருந்த நிலையில்தான் தகவல்களை அறி வது ஒரு உரிமை என்ற முழக்கத்தோடு போராட்ட இயக்கங்கள் வெடித்தன. அந்த வெடிப்பு, அந்த உரிமையை ஐ.நா. சபை அங்கீகரிக்கவும், அதன் உறுப்பு நாடுகள் இதற்கான சட்டம் கொண்டு வருமாறு தீர்மா னம் நிறைவேற்றவும் வழிவகுத்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தக் கவைக்கும் முயற்சியாக, ஒவ்வொரு ஆண் டும் செப்டம்பர் 28 அன்று “அறிந்து கொள்வதற்கான உரிமை நாள்” என்று அனுசரிக்கப்படுகிறது. பல்கேரியா நாட்டின் சோஃபியா நகரில் 2002-ம் ஆண்டு இதே நாளில் நடைபெற்ற பன்னாட்டுக் கூட்டத் தில், உலகந்தழுவிய அளவில் தகவல் சுதந் திரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நாளாகக் கடைப்பிடிக்க முடிவுசெய்யப்பட் டது.

தகவல் பெறுவதற்கான வாய்ப்பு ஒவ் வொருவரின் உரிமை; தகவல் அளிப்பதே அடிப்படை விதியாக இருக்க வேண்டும், ரகசியம் என்பது விதிவிலக்காகவே இருக்க வேண்டும்; பொதுமக்கள் சார்ந்த அனைத்து அரசு அமைப்புகளுக்கும் இது பொருந்தும்; தகவல் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமையாகவும், விரைவாகவும், இலவசமா கவும் இருக்க வேண்டும்; வேண்டுகோள் விடுப்போருக்கு உதவுவது அதிகாரிகளின் கடமை; தகவல் மறுக்கப்படுமானால் நியாய மான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண் டும்; ரகசியம் காக்கப்படுவதில் பொதுநல னுக்கே முன்னுரிமை; ஒரு பாதகமான முடிவு எடுக்கப்படுகிறது என்றால் மேல்முறையீடு செய்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு; அரசு அமைப்புகள் மையமான தகவல்களை முனைப்புடன் வெளியிட வேண்டும்; ஒரு சுதந்திரமான அமைப்பி னால் இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்... ஆகிய இந்த அடிப்படைக் கொள்கைகளை இந்த நாளில் மக்களி டையே எடுத்துச் செல்லவும் முடிவு செய்யப் பட்டது.

இந்தியாவில் நடந்த போராட்ட இயக் கத்தின் வெற்றியாக 2005ம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த வெற்றி அவ்வ ளவு எளிதில் வந்துவிடவில்லை. சட்டப்பூர்வ அதிகாரம் ஏதுமற்ற ஏற்பாடாக மாற்றுவதற் கெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் முயன் றார்கள். பல துறைகளை இந்தச் சட்டத்திற்கு உட்படாததாக அறிவிக்கவும், ஒரு நீர்த்துப் போன சட்டமாக மாற்றவும் அதிகார வர்க்க மும் பல வழிகளைக் கையாண்டது. ஆயி னும், இடதுசாரிகள் ஆதரவோடுதான் ஆட்சி நடந்தாக வேண்டும் என்ற நிலையில் இருந்த ‘முதலாம்’ ஐமுகூட்டணி அரசு, ஒரேயடியாக நீர்த்துப்போகச் செய்ய முடியாமல் தற் போதுள்ள சட்டத்தைக் கொண்டு வந்தது.

அப்படியும் - பாதுகாப்புத்துறை, உளவுத் துறை போன்றவை இந்தச் சட்டத்தின் கையில் அகப்படாமல் விலக்கிவைக்கப்பட் டுள்ளன. அண்மையில் உச்சநீதிமன்றம் தனக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று சொல்ல, அதெல்லாம் பொருந்தும் என்று தில்லி உயர்நீதிமன்றம் அறிவித்த சுவை யான நிகழ்ச்சியும் நடந்தது.

சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப் பட்ட தேசிய தகவல் உரிமை ஆணையம், மாநில தகவல் ஆணையம் ஆகியவற்றிற்குப் போதுமான ஊழியர்கள் இல்லை என்பது போன்ற பிரச்சனைகள் இந்த ஆணையங் கள் முறையாகவும், வீரியமாகவும் செயல் படுவதற்கு முட்டுக்கட்டைகளாக உள்ளன. இதனை மனித உரிமை இயக்கங்கள் பல முறை சுட்டிக்காட்டியும் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

சட்டப்படி அரசு அலுவலகங்களில் தக வல் அலுவலர்கள் என நியமிக்கப்பட்டிருந் தாலும், அவர்களுக்கு சட்டம் பற்றிய போதிய பயிற்சி இல்லை. ஆகவே, பொதுமக்க ளிடமிருந்தோ, அமைப்புகளிடமி ருந்தோ தகவல்கள் கேட்டு வரும் விண்ணப்பங்களுக்கு பதில ளிக்காமலே விடுவது என்பது சர்வசாதாரணமாக நடை பெறுகிறது. எப்படிப்பட்ட தக வல்களை தெரிவிக்கலாம், அல்லது தெரிவிக்கக் கூடாது என்பதை அவரவர் புரிதலுக்கு ஏற்ப முடிவு செய் கிறார்கள். சில இடங்களில், குறிப்பிட்ட தகவல்கள் சட்டப்படி தெரிவிக்க வேண்டியவையாக இருந் தாலும் கூட, உயரதிகாரிகள் அல்லது அந்த உண்மைகள் தெரியக்கூடாது என்று விரும் புகிற சில சக்திகளின் நிர்ப்பந்தங்களால் அந் தத் தகவல்களை மறைப்பது, இழுத்தடிப்பது போன்ற விளையாட்டுகளும் நடக்கின்றன. தனிப்பட்ட ஆர்வத்துடன் இந்தச் சட்டத்தின் நோக்கங்களைப் படித்துப் புரிந்துகொண்டு ஈடுபாட்டுடன் அந்த மேசைகளில் அமர்ந் திருப்போர் மட்டுமே ஒரு கடமை உணர்வு டன் தகவல்களைத் தெரிவிக்கிறார்கள். வழக்கம்போல் அப்படிப்பட்டவர்களின் எண் ணிக்கை குறைவு.

பல இடங்களில், வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கே, தகவல் அலுவலர்களாகவும் பொறுப்பு தரப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் பணிச்சுமையின் காரணமாக, பெரிதும் அடிபடுவது தகவல் தெரிவிக்கும் அலுவல் தான் என்று இதற்காக அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். “தக வல் ஆணையத்தின் ஆணைகளை, பல் வேறு அலுவலகங்களின் தகவல் அலுவலர் கள் மதிப்பதில்லை; அந்த ஆணைகளை எதிர்த்து வழக்குப் போடுவதும் நடக்கிறது. தகவல் தர மறுத்த ஒரு அலுவலரை ஆணை யம் கடுமையாக விமர்சித்து கடிதம் எழுதி யது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவருக்கு அபராதம் விதித்து ஆணை வந்தபோது அவர் குறிப்பிட்ட தக வலைத் தர முன்வந்தார்! தன்னைப் பற்றிய விமர்சனத்திற்குக் கவலைப்படாமல், பணம் போய்விடுமே என்ற கவலையுடன் அவர் நடந்துகொண்டது எந்த அளவுக்கு இப்படிப் பட்ட அலுவலர்களுக்குப் பொறுப்புணர்வு வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்ற எண்ணத் தைத்தான் ஏற்படுத்தியது,” என்றார் அப்ப டிப்படியேறி இறங்கச் சளைக்காத ஒரு செய் தியாளர்.

இப்படிப்பட்ட நிலையில், மாநிலத் தகவல் ஆணையத்தில் நான்கைந்து முறை மேல் முறையீடு செய்தாக வேண்டிய நிலை உள் ளது என்று தமிழ்நாடு தகவல் உரிமைக்கான பிரச்சார அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறி னர். தகவல் அலுவலர்கள் பற்றிய விவரங்கள் ஆணைய அலுவலகத்தில் வைக்கப்படாதது, அவ்வப்போது ஆணையமே மக்களுக்காக சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கையேடு களை வெளியிட வேண்டும் என்பது நடை முறைப்படுத்தப்படவில்லை என்பன போன்ற குறைபாடுகளையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

பெரிய நகரங்களிலாவது ஊடக வெளிச் சம் உடனடியாகப் பாய்வதால் இந்தச் சட்டத் தின் பலன் மக்களுக்கு ஓரளவுக்காவது கிடைக்கிறது. சிறிய ஊர்களிலும், கிராமங் களிலும் சட்டத்தின் துணையை நாடுவோர் மதிக்கப்படுவதே இல்லை. அண்மையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராம ஊராட்சிக்கு, ஊரில் தொடங்கப்பட்ட பல மேம்பாட்டுத் திட்டங்களின் கதி என்ன என்று கேட்டு கடிதம் அனுப்பிய ஒரு இளை ஞர், அந்த ஊராட்சித் தலைவரின் ஆட்க ளால் தாக்கப்பட்ட நிகழ்ச்சி ஊடகங்களில் வெளியானது. இப்படித் தாக்குவதும், மிரட்டு வதும் பல இடங்களில் நடப்பதாகக் கூறப்படு கிறது.

இந்தச் சட்டம் குறித்து இன்னும் பொது மக்களுக்கு முழுமையாகத் தெரியாமல் இருக்கிறது. அப்படித் தெரியாமல் இருப்பதே நல்லது என்று ஆட்சி பீடத்தில் இருப்போரும், அதிகார வர்க்கத்தினரும் நினைக்கிறார் களோ?, நாடு முழுவதும் இவர்களைப் பயன் படுத்தி ஆதாயம் அடைகிற பெரியதொரு சுய நலக் கூட்டம் அதைத்தான் விரும்புகிறதோ?

அப்படியானால், மக்களின் அடிப்படையான அறியும் உரிமை அரிக்கப்படுகிறது என்றே அர்த்தம். அந்த அரிமானத்தைத் தடுக்கும் ஆற்றல் மக்கள் சக்திக்குத்தான் இருக்கிறது. அந்த சக்தியைத் தட்டியெழுப்பிட, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை எளிய மக்களிடம் வலிமையாக எடுத்துச் சென்றாக வேண்டும்.

Wednesday, September 15, 2010

கோடீஸ்வரர்களின் அமைச்சரவை


மத்திய அரசில் அதிக சொத்து உள்ள அமைச்சர்கள் பட்டியலில் பிரபுல்படேல் முதலிடத்திலும் அதையடுத்து ஜோதிராவ் சிந்தியாவும் உள்ளனர். இந்த இருவருக்கும்

ரூ.25 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ரூ.10.5 கோடி சொத்து உள்ளது.

மத்திய அரசில் உள்ள அமைச்சர்களின் சொத்து பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் வரிசையில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சரான பிரபுல்படேல் முதலிடத்தில் உள்ளார். அவரது பெயரில் ரூ.29.62 கோடி சொத்து உள்ளது. அவரது மனைவி வர்ஷா படேல் பெயரில் ரூ.37.7 கோடி சொத்து உள்ளது.

இந்த தம்பதிக்கு ரூ.18லட்சத்திற்கான பணம் பல்வேறு வங்கி கணக்குகளில் உள்ளன. இதைத் தவிர அமைச்சர் படேலின் பெயரில் ரூ.67 லட்சத்திற்கு நகைகள் உள்ளன. அவரது மனைவி நகைகள் மதிப்பு ரூ.1.3 கோடியாகும்.

இவரது மகனுக்கு ரூ.1.3 கோடி மதிப்பில் நகைகள் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி பிரபுல் படேலின் சொத்து மதிப்பு இதுவாகும். அமைச்சர் தனக்கோ அல்லது தனது குடும்பத்தினர் வசம் உள்ள வாகனங்கள் குறித்து தெரிவிக்கவில்லை.

இவரையடுத்து சொத்து மதிப்பில் 2ம் நிலையில் உள்ள வர்த்தக துறை இணையமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஏறக்குறைய ரூ.25 கோடி சொத்துக்கள் உள்ளன. இவருக்கு ரூ.5.7 கோடிக்கு மேல் நகைகள் உள்ளன. இவர் இந்திய மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களில் ரூ.16 கோடி மதிப்பில் முதலீடு செய்துள்ளார். நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பெயரில் ரூ.1 கோடி வரை சொத்து உள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ.1.6 கோடிக்கு சொத்து உள்ளது.

வேளாண் துறை அமைச்சர் சரத் பவாருக்கு ரூ.6.5 கோடி சொத்து உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ரூ.10.5கோடி சொத்து உள்ளது. அவரது மனைவி நளினிக்கு ரூ.8.5 கோடி மதிப்பு சொத்து உள்ளது. ப.சிதம்பரத்திற்கு கர்நாடகத்தில் உள்ள குடகு பகுதியில் ரூ.28.9 லட்சம் மதிப்புள்ள காபி எஸ்டேட் உள்ளது. ப.சிதம்பரம் வைத்திருக்கும் தொலைபேசி மதிப்பு ரூ.38 ஆயிரம் ஆகும். அவரது மனைவி தொலைபேசியின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தமது பெயரில் ரூ.1லட்சம் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். அவரது மனைவி எலிசபெத் பெயரில் ரூ.15லட்சம் மதிப்புள்ள வீடும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிலம் மற்றும் வங்கி கணக்கு களில் ரூ.3.19 லட்சம் பணம் உள்ளது. ஏ.கே. அந்தோணி மாநிலங் களவை உறுப்பினராக உள்ளார்.

மத்திய அமைச்சர்கள் சொத்து விவரம் குறித்து, சமூக ஆர்வலர் எஸ்.சி.அகர்வால் தகவல் உரிமை சட்டத்தில் கேட்ட போது பிரதமர் அலுவலகம், அமைச்சர்களின் இந்த சொத்து விவரங்களை வெளியிட்டது.

தொடரும் வன்முறைகள் தகவல் கேட்டால் தன்டனைகள் கல்லூரி மாணவர் கிராமப் பஞ்சாயத்து பற்றி தகவல் கேட்டதால் வீடு புகுந்து தாக்கப்பட்டார்

Please click on the following link to read the item:


Wednesday, August 11, 2010

எங்கே அந்த ஆவணங்கள்?

ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுப்போன சொத்து என்று நாம் மார்தட்டிக் கொள்வதில் ஒன்று இந்திய அரசு நிர்வாகம். எதுவுமே இங்கே சட்டப்படிதான் நடக்கும். தகுந்த குறிப்புகளுடன் இன்ன சட்டப்பிரிவின்படி மட்டுமே எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட வேண்டும் என்கிற பிரிட்டிஷ் காலத்திய நிர்வாக முறையின் நம்பகத்தன்மையைப் பற்றிச் சிலாகித்துப் பேசாதவர்கள் யாரும் கிடையாது.ஆனால், இந்த பிரிட்டிஷ் காலத்து நிர்வாக முறையையும் நமது சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்கள் தங்களது வசதிக்கேற்ப நீர்த்துப்போகச் செய்து விட்டிருக்கிறார்கள். அதுமட்டுமா? அரசு எடுக்கும் முக்கியமான முடிவுகள் சரித்திர ஆவணங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதற்காகத்தானே கோப்புகளும், குறிப்புகளும். ஆனால், சுதந்திர இந்திய சரித்திரத்தின் கரும்புள்ளி என்று கருதப்படும் அவசரநிலைச் சட்ட காலத்து ஆவணங்கள் எதுவுமே காணப்படவில்லை என்கிற தகவல் அதிர்ச்சி அளிக்கிறதே...

அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள், அமைச்சரவை எடுக்கும் தீர்மானங்கள், ஆணைகள் என்று எல்லா கோப்புகளும் அந்தந்தத் துறையில் 25 ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது விதி. சில முக்கியமான ஆவணங்கள் 25 ஆண்டுகளுக்கு வெளியில் தெரியாமல் ரகசியக் கோப்புகளாகப் பாதுகாக்கப்படும். ஆனால், 25 ஆண்டுகள் கழிந்தால் எல்லா கோப்புகளும் ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதை மக்கள் பார்வைக்கு உள்படுத்தப்பட வேண்டும்.

எம்.ஜி. தேவசகாயம் என்பவர் இந்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரி. இவர் அவசரநிலைச் சட்ட காலத்தில் சண்டீகரில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில விவரங்களைக் கேட்டிருந்தார்.பிரதமரின் அலுவலகத்திடம் இவர் எழுப்பியிருந்த 15 கேள்விகள் அவசரநிலைச் சட்டப் பிரகடனம் பற்றியது. அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு அரசுத் தரப்பில் கூறப்பட்ட காரணங்கள் என்ன? மத்திய அமைச்சரவையால் அவசரநிலைப் பிரகடனம் செய்வது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டபோது கூடிய அமைச்சரவை உறுப்பினர்கள் யார், அந்தப் பிரகடனத்தின் பரிந்துரை என்ன, யாரால், எப்படி, எப்போது அமைச்சரவையின் பரிந்துரைகள் குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமதுவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது?அவசரநிலைச் சட்டம் தொடர்பாகப் பிரதமர் அலுவலகத்தில் யார், யார் ஏனைய துறைகளுக்கும், மாநில அரசுகளுக்கும் எப்படிச் செயல்பட வேண்டும், இன்னின்னாரைக் கைது செய்ய வேண்டும் என்கிற ஆணைகளைப் பிறப்பித்தனர். பத்திரிகைத் தணிக்கையை மேற்பார்வை பார்த்தது யார்? "மிசா' தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டது யார்? "மிசா'வில் கைது செய்யப்பட்ட நபர்கள் யார், யார்? எல்லாவற்றுக்கும் மேலாக, அவசரநிலைச் சட்டம் தொடர்பான அத்தனை கோப்புகளும், அந்தக் கோப்புகளில் இருக்கும் குறிப்புகளும் உள்ளிட்ட எல்லா விவரங்களின் நகலும் தேவசகாயத்தால் பிரதமர் அலுவலகத்திடம் கோரப்பட்டிருந்தது.

சம்பவம் நடந்து 30 ஆண்டுகளாகிவிட்டதால், அவசரநிலைச் சட்டம் பற்றிய தகவல்களை இனியும் அரசு ரகசியங்களாகக் கருதப்பட முடியாது என்பதும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், தேவசகாயம் கோரிய தகவல்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதும்தானே நியாயம்? அப்படி அளிப்பதுதானே அரசின் வெளிப்படைத் தன்மைக்கு அடையாளம்? அதற்காகத்தானே தகவல் பெறும் உரிமைச் சட்டமே இயற்றப்பட்டது?

பிரதமர் அலுவலகம் தன்னிடம் அவசரநிலைச் சட்டம் பற்றிய தகவல்கள் ஏதுமில்லை என்று கூறி, அவசரநிலைச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தேவசகாயம் கோரிய தகவல்களை அனுப்பியது. உள்துறை அமைச்சகமோ, தேவசகாயம் கோரியிருக்கும் தகவல்கள் 25 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், அதனால் தங்களிடம் அவசரநிலைச் சட்டம் தொடர்பான கோப்புகளோ, தகவல்களோ இல்லை என்றும் பதில் அனுப்பி இருக்கிறது. ""1997-ம் ஆண்டு பொது ஆவணச் சட்டத்தின் 5-வது பிரிவின்படி, கோரப்பட்ட தகவல்களும், ஆவணங்களும் தேசிய ஆவணக் காப்பகத்தில் காணப்படும்'' என்று கூறி, அந்தப் பதிலின் நகலை தேசிய ஆவணக் காப்பகத்துக்கும் அனுப்பிவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து தேவசகாயத்துக்குப் பதில் கிடைத்திருக்கிறது. ""முதற்கட்ட ஆய்வில் நீங்கள் கோரியிருக்கும் தகவல்கள் எதுவும் எங்களிடம் காணப்படும் ஆவணங்களில் இல்லை. ஏனென்றால், அவசரநிலைச் சட்டப் பிரகடனம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் தேசிய ஆவணக் காப்பகத்துக்கு இதுவரை மாற்றப்படவில்லை'' என்பதுதான் பதில்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(3)-ன்படி எழுப்பப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்காத தேவசகாயம், அதே சட்டத்தின் பிரிவு 18-ன் படி தலைமைத் தகவல் ஆணையருக்கு ஒரு புகார் அனுப்பியிருக்கிறார். என்ன பதில் வருகிறது, என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.அவசரநிலைச் சட்டப் பிரகடனம் தொடர்பான கோப்புகளும், ஆவணங்களும் எங்கே? அதை வெளியிட விரும்பாமல் அதிகார வர்க்கமும் அரசும் சாக்குப்போக்குக் காட்டி மறைக்கப் பார்க்கின்றனவா, இல்லை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தொடங்கிப் பல அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் மக்கள் மன்றத்தின் கேள்விகளுக்கு உள்ளாவார்கள் என்பதால் அந்த ஆவணங்களை அழித்தே விட்டார்களா? அழித்தது யார்?ஆவணங்கள் பாதுகாக்கப்படுவதில்லை என்றால் எதற்காகக் கோப்புகளும், குறிப்புகளும்? தகவல் பெறும் உரிமைச் சட்டமே வெறும் கண்துடைப்புத்தானா? அரசு தேவசகாயத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்!

Tuesday, July 27, 2010

தகவல் கேட்டால் கொலைதான் பரிசு வேடிக்கை பார்க்கும் அரசு

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கடந்த 7 மாதத்தில் மட்டும் 8பேர் கொல்லப்பட்டுள்ளனர் பத்துமேற்பட்டோர் தாக்கப்பட்டுள்ளனர்

Following 8 RTI activists were killed in last 7 months:-

1) July 20, Amit Jethwa, Ahmedabad, Gujarat
2) May 31 (or 26th May), Datta Patil, Kolhapur, Maharashtra
3) April 21, RTI activist Vitthal Gite, Beed, Maharashtra
4) April 11, Sola Ranga Rao, Krishna District, Andhra Pradesh
5) February 26, Arun Sawant, Badlapur, Maharashtra
6) February 14, Shashidhar Mishra, Begusarai, Bihar
7) February 11, Vishram Laxman Dodiya, Ahmedabad, Gujarat
8) January 13, Satish Shetty, Pune, Maharashtra

According to Shri Babulal Vaghela about 20 person were attacked in 2010.

Thursday, July 22, 2010

தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கொலையில் பாஜக எம்.பி.க்கு தொடர்பு

தகவல் அறியும் உரி மைச் சட்ட ஆர்வலர் அமித் ஜித்வா, மோட்டார் சைக்கிளில் வந்த அடையா ளம் தெரியாத மர்ம நபர் களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இக் கொலையின் பின்னணியில் பாஜக எம்பி ஜூண்டாகத் டினு சோலங்கி இருக்கிறார் என்று அமித் ஜித்வாவின் தந்தை குற்றம் சாட்டி யுள்ளார்.

குஜராத் கிர் வனப்பகுதி யில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக் கும் சுரங்கங்கள் பற்றி அமித் ஜித்வா பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்குத் தொடர்ந்த சிலநாட்களுக் குள் அடையாளம் தெரி யாத மர்மநபர்களால் அமித் சுட்டுக் கொல்லப்பட்டார். செவ்வாயன்று இரவு அவர் தனது வழக்கறிஞரைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது சுடப்பட்டுள்ளார்.

டினு சோலங்கியைத் தொடர்பு கொள்வதற்காக பலமுறை அவரது மொபைல் போனில் தொடர்பு கொண் டபோதும், அலுவலகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதும் அவரு டன் தொடர்பு கொள்ள இயலவில்லை.

அமித் ஜித்வாவின் தந்தை பிகாபாய் ஜித்வா,”எனது மகனைக் கொலை செய்த பின்னணியில் உள்ளவர் டினு சோலங்கி எம்.பி தான். அவர் பல தடவை என் மகனை தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து, பாஜக செய்தித் தொடர்பாளர் ஐ.கே. ஜடேஜா இதுபற்றிக் கருத்துக் கூற மறுத்து விட்டார்.

மேலும், இது அரசியல் பிரச்சனையல்ல. இது போன்ற குற்றச்சாட்டுகள் சகஜம். அவை நிரூபிக்கப்பட்டால் தான் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித் தார்.

கொலை செய்யப்பட்ட அமித் ஜித்வா தகவல் அறி யும் உரிமைச்சட்டத்தில் தீவிர ஆர்வலராக இருந்தார். குறிப்பாக வனவிலங்கு களைப் பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். கிர் வனப்பகுதியில் உள்ள சிங்கங்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளவர். பிரபல திரைப்பட நடிகர் அமீர் கான் சிங்காரா வனப்பகுதி யில் மிருகங்களை வேட் டையாடிய வழக்கில் புஜ் செசன்ஸ் நீதிமன்றத் தீர்ப் பை எதிர்த்து உயர்நீதிமன் றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்தார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் பெறுமாறு மற்றவர் களுக்கும் பயிற்சி அளித்தார். தற்போது கிர் வனப்பகுதி யில் திருட்டுத்தனமாக மணல்குவாரி அமைத்து மணல் திருடுகிறவர்கள் அதிகரித்துள்ளனர். ஜூனா கத் மாவட்டம் கிர் வனப் பகுதியில் மணல் திருடு வதை எதிர்த்து உயர்நீதிமன் றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மேலும் அம்ரேலி மாவட்டம் கம்பா தாலுகா வில் கிர் இயற்கை இளை ஞர் மன்றம் ஒன்றைத் துவக்கியுள்ளார்.

பொதுநலவழக்கில் லோக் அயுக்தா தொடங்கு வதில் அரசின் செயலற்ற தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். இவரு டைய பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், காலியாக உள்ள பணியிடங் களில் தகவல் அளிக்கும் அலுவலர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது.

Monday, July 12, 2010

ஆண்டர்சன் விவகாரம்: தகவல் அளிக்க சிபிஐ மறுப்பு

போபால் விஷவாயு படுகொலையில் முக்கியக் குற்றவாளியான ஆண்டர்சனை நாடு கடத்துவது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திற்கும், மத்திய புலனாய்வுக் கழகத்திற்கும் (சிபிஐ) இடையே நடை பெற்ற தகவல் பரிமாற்றங்களை வெளியிட முடியாது என்று சிபிஐ பதில் அளித் துள்ளது.


ஆண்டர்சனை நாடு கடத்துவது குறித்து கோரிக்கையை தொடர வேண் டாம் என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக, போபால் பேரழிவு சம்பவம் தொடர்பாக 1994-95ல் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து, இதுதொடர்பான விப ரங்களை அறிய தகவல் உரிமைச் சட் டத்தின் கீழ் அபிஷேக் சுக்லா என்பவர் சிபிஐ.,க்கு மனுச் செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் மேற்கண்டவாறு தகவல் தர இயலாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், ஆண்டர்சனை மீண்டும் இந்தி யாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பழைய விபரங்களை வெளியிடுவது தற்போதைய நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக் கும் என்று சிபிஐ தனது பதிலில் குறிப் பிட்டுள்ளது.

1984-ல் நிகழ்ந்த போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோருக்கு நிரந்தரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.

ஆனால், இந்த முக்கியக் குற்றவாளி ஆண்டர்சன் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, April 20, 2010

அரசாங்கத்தில் உங்கள் வேலை நடக்க வேண்டுமா

கேளுங்கள் கொடுக்கப்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த மக்களின் எந்த சந்தேகங்களுக்கும் அரசு அலுவலகங்கள் பதில் தருவதைக் கட்டாயமாக்கும் தகவல் உரிமைச்சட்டம் 2005ல் அமலுக்கு வந்தது. அன்றிலிருந்து இன்றுவரை இந்தச் சட்டத்துக்குக் கிடைத்து வருகிற வரவேற்பு அமோகம்.

தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பலன் அடைந்தவர்களின் அனுபவங்களைக்கேட்டால், அந்தச் சட்டத்தின் வலிமை தெளிவாகப் புரியும். சென்னை ராயபுரத்தில் வசிக்கும் பாத்திர வியாபாரி சங்கர். இவருடைய ரேஷன்கார்டு ஐந்து வருடங்களுக்கு முன்னால் காணாமல் போனது.
""மாசந்தோறும் ராயபுரம் குடிமைப் பொருள் வழங்கல் மண்டல அலுவலகத்துக்குப் போய் நான் புது ரேஷன் கார்டு கேட்குறதும் அங்குள்ள ஊழியர்கள் பொறுப்பு இல்லாம பதில் சொல்றதுமா அஞ்சு வருஷம் போயிடுச்சு. வெறுத்துப்போயிட்டேன். தற்செயலா தகவல் உரிமைச்சட்டத்தைப் பற்றி ஒரு அமைப்பு மூலமா தெரிய வந்துச்சு. ரேஷன் கார்டு ஏன் கொடுக்கலை. என்ன சான்றுகளை எதிர்பார்க்குறீங்க, ரேஷன்கார்டு கேட்குறவருக்கு விதிமுறைப்படி எத்தனை நாளுக்குள்ள கொடுக்கணும்னு பத்துக்கும் மேற்பட்ட கேள்விகளை எழுதி, ஒரு கடிதம் அனுப்பினேன். அந்தக்கடிதத்துக்கு அவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. "ரேஷன்கார்டு ரெடி'னு பதறியடிச்சுட்டு எனக்குத் தகவல்வந்துச்சு. சிவில் சப்ளைஸ் ஆஃபிசில் வழக்கமா அலட்சியமா பதில் சொல்லிட்டிருந்த ஊழியர்கள் எல்லாம் ரொம்ப மரியாதையா என்னை உட்கார வச்சுப் பேசுனாங்க. அஞ்சு வருஷமா எனக்குக் கிடைக்காத ரேஷன் கார்டு ஒரே வாரத்துல கிடைச்சது'' என்று இன்னும் அந்த ஆச்சர்யம் விலகாமல் சொல்கிறார் சங்கர்.

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் .டி.ஊழியர் பிரசன்னா தனது பெற்றோரின் பாஸ்போர்ட்டுக்காகப் போராடிய அனுபவம் இது. ""பாஸ்போர்ட் கேட்குறவங்களோட முகவரியை போலீஸ் நேரில் சரிபார்த்து பாஸ்போர்ட் ஆபீசுக்கு ரிப்போர்ட் அனுப்பணும். எங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் தேவையில்லாத டாக்குமென்ட்ஸ் எல்லாம் எங்கிட்ட கேட்டாங்க. என்னோட வயசான அம்மா, அப்பாவை ஸ்டேஷனுக்கு அடிக்கடி வரவழைச்சு அலையவிட்டாங்க. விதிமுறைப்படி தேவையான சான்றுகளா நான் காட்டினதை எல்லாம் கண்டுக்காம, "அந்த முகவரியில் யாரும் அப்படி வசிக்கலை'னு பாஸ்போர்ட் ஆபீசுக்கு ரிப்போர்ட் அனுப்பிட்டாங்க. சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கு புகார் அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கெல்லாம் தெளிவான விளக்கம கேட்டு தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் கமிஷனர் ஆபீசுக்கு கடிதம் அனுப்பினேன். ரெண்டே நாளில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பாஸ்போர்ட் ஆபீசுக்கு அட்ரஸ் வெரிஃபிகேஷன் ரிப்போர்ட் அனுப்பிட்டாங்க'' என்கிறார் பிரசன்னா. தகவல் உரிமைச் சட்டத்தின் 7(1) பிரிவின்பிடி தகவல் கேட்டதால் வழக்கத்தைவிட அதிரடியாக இவரது வேலை நடந்திருக்கிறது. விண்ணப்பதாரரின் உயிருக்கும் உடைமைக்கும் பாதகம் ஏற்படும் சூழ்நிலை எனில் 48 மணி நேரங்களுக்குள் தகவல் தர வேண்டும் என்பது இந்தப் பிரிவின் அடிப்படை விதி.

பல்லாவரம் அருகே உள்ளே ஒரு ஊரில் பல வருடங்களாக கவனிக்கப்படாமல் கிடந்த தங்களது தெருவுக்காக தகவல் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தியவர் கல்லூரிப் பேராசிரியர் லூர்து சின்னப்பன். ""எங்க தெருவுக்கு ஏன் ரோடு போடலைனு கேட்டு ஊராட்சியின் நிர்வாக அதிகாரிக்கு மனுபோட்டேன். என்னோட கேள்விகளுக்கு அவங்களால் பதில் தர முடியலை. ஆனா சில நாட்களிலேயே ரோடு போடுறதுக்கு சர்வே பண்ண ஆள் வந்துட்டாங்க. சுமாரானரோடாக இருந்தாலும், இப்போ சிரமம் இல்லாம நடமாட முடியுது'' என்று நிறைவாகச் சொல்கிற சின்னப்பன் தகவல் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

பிரபல வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியிடம் கேட்டபோது,""மின் இணைப்பு கொடுக்குறதுக்காக மின்சார வாரியம் ஒரு குறிப்பிட்ட தொகையை "டெபாசிட்'டாக வசூலிக்குது. அந்த டெபாசிட்டை எல்லாம் என்ன பண்றீங்கனு ஆர்.டி.. மூலமா ஒரு மனு போட்டுக் கேட்டேன். ஒவ்வொரு கன்ஸ்யூமரோட டெபாசிட்டுக்கும் ஆறு சதவீத வட்டி போட்டு அவங்க அக்கவுண்ட்ல சேர்த்துருவோம்னு மின்சார வாரியத்துலேர்ந்து பதில் வந்தது. ஒருத்தர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செஞ்சா, எதிர் மனுதாரர் சொல்ற பதிலை அவர் எழுத்துப்பூர்வமா பார்க்க முடியாது. நீதிமன்ற விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லாம கஷ்டப்பட வேண்டியிருக்கும். இந்தச்சட்டத்தைப் பயன்படுத்தித்தான் பல வழக்குகளில் எதிர்மனுதாரர்களின் ஸ்டேட்மென்ட்டை போலீசிடமிருந்து வாங்க முடியுது'' என்று பல உதாரணங்களைச் சொல்லி பிரமிப்பூட்டுகிறார்.

சமீபத்தில் தகவல் உரிமைச்சட்டத்தில் சில திருத்தங்களை ஏற்படுத்த மத்திய அரசு ஒரு குழுவை நியமித்திருக்கிறது. இந்த நடவடிக்கை அந்தச் சட்டத்தின் கூர்மையை மழுங்கடிக்கும் முயற்சிதான் என்கிறார்கள் சிலர்.

""தற்போது நடைமுறையில் இருக்குற தகவல் உரிமைச்சட்டத்திலேயே பல குறைகள் இருக்கு. உதாரணமா, உதவி தாசில்தாரிடம் தகவல் கேட்கிற மனுவுக்கு பதில் கிடைக்கலைனா, நாம அவருக்கு மேலே இருக்குற தாசில்தாரிடம் தான் மேல் முறையீடு பண்ணணும். தனக்கு ஆதரவா செயல்பட்ட உதவி தாசில்தாருக்கு எதிரா தாசில்தார் எப்படி நடவடிக்கை எடுப்பார்? ஒரே மனுவிலேய தகவல் கிடைக்குறதை அரசு கட்டாயமாக்கணும். தகவல் கொடுக்கறதுக்கான 30 நாள் கால அவகாசத்தையும் குறைக்கணும். அதையெல்லாம் செய்யாம புது திருத்தங்களைப் பற்றி அதிகாரிகள் பேசுறது தேவையில்லாத வேலை''

ஆனந்த் செல்லையா




Wednesday, March 10, 2010

"சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்கு உட்பட்டது'

"சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்கு உட்பட்டது' என்ற, டில்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சுப்ரீம் கோர்ட் தீர்மானித்துள்ளது."நீதிபதிகளின் சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண் டும்' என, சுபாஷ் அகர்வால் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதற்குப் பதிலளித்த சுப்ரீம் கோர்ட், "தலைமை நீதிபதியிடம் மற்ற நீதிபதிகள் சமர்ப் பிக்கும் சொத்து விவரங்கள் தனிப்பட்டவை. அதை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது' என, தெரிவித்தது. அதிக அளவில் வெளிப்படையான அணுகுமுறையை கடைபிடித்தால், அது நீதித்துறையின் தனித்தன்மையை பாதிக்கும் என்றும் கருத்துக் கூறியது.

இதை, எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட், "சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட வரம் பிற்கு உட்பட்டதே. அந்தச் சட் டப்படி நீதிபதிகள் சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிடலாம்' என, உத்தரவிட்டது.தனி நீதிபதி அளித்த இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில், சுப்ரீம் கோர்ட் சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி ஐகோர்ட் தலைமை நீதிபதி ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜித் சென் மற்றும் முரளிதர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித் துள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்கு உட் பட்டதே. நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாடு என்பது, நீதிபதியின் தனிப்பட்ட உரிமை தொடர்பானது அல்ல. அவருக்கு உள்ள பொறுப்பு தொடர் பானது.

தகவல் உரிமைச் சட்டப்படி, தலைமை நீதிபதியின் அலுவலகம் ஒரு பொது ஆணையம். கீழ் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் எல்லாம் பணி விதிமுறை களுக்கு கட்டுப்பட்டு, தங்களின் சொத்து விவரங்களை அறிவிக் கின்றனர்.அப்படிப்பட்ட நிலையில், மேல் கோர்ட் நீதிபதிகள் மட் டும், தங்களுக்கு அதுபோன்ற பொறுப்பு இல்லை என, சொல்ல முடியாது.

அவர்கள் தங்களின் சொத்து விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். பொறுப்புடைமையை உறுதி செய்ய கீழ்கோர்ட் நீதிபதிகள் சொத்து விவரங்களை சமர்ப்பிப்பது அவசியம் என்கிற போது, அரசியல் சட்ட கோர்ட்டுகளின் நீதிபதிகளும் தங்கள் ஆஸ்தி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமே.நாட்டில் முழுமையான ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் எனில், நீதித்துறை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், நேர்மையாக செயல்பட வேண்டியது அவசியம்.ஆகவே, தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்குள் வராது என்ற சுப்ரீம் கோர்ட்டின் மனுவை ஏற்க முடியாது.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட், தங்கள் கோர்ட்டிலேயே மேல்முறையீடு செய்ய உள்ளது. ஹோலி விடுமுறை முடிந்து ஒருவார காலத்துக்கு பிறகு சுப்ரீம் கோர்ட் இன்று திறக்கப் படுகிறது. அட்டர்னி ஜெனரல் வாகன் வதி சுப்ரீம் கோர்ட்டின் சார்பில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து வாதாட உள்ளார். ஐகோர்ட்டின் தீர்ப்பை நிறுத்தி வைக்கும் படி வாகன்வதி, தனது வாதத்தில் குறிப்பிட உள்ளார்.

Saturday, February 27, 2010

தகவல் உரிமைச் சட்டம்: புலியைப் பூனையாக்கி...

பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர், அங்குள்ள சிவப்பு நிற அரசு எண்ணெய் நிறுவனத்திலிருந்து ஒரு தகவலைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். இதற்காக நகல் கட்டணமாக ரூ.100ம் சேர்த்து அனுப்பியிருந்தார். இதைப் பார்த்த ஆயில் நிறுவன தகவல் அதிகாரி, 40 பக்க நகலுக்கு ஒரு பக்கத்துக்கு ரூ.10 வீதம் ரூ.400 அனுப்ப வேண்டும் என பதில் எழுதினார்.

நம்மவர், மிரளவில்லை. கட்டண விதிமுறையைக் காட்டி, ஒருபக்கத்துக்கு ரூ.2 போதும் என மற்றொரு கடிதம் எழுதினார். அந்த அதிகாரிகள் நம்மவரை இழுத்தடிக்க நினைத்தார்கள் போலும். ரூ. 400 கொடுத்தால்தான் தகவல். இல்லையென்றால் முடியாது எனப் பிடிவாதமாகச் சொல்லி விட்டார்கள்.

நம்மவர், தில்லியிலுள்ள தலைமைத் தகவல் ஆணையரிடம் முறையிட்டார். ஆயில் நிறுவன அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணை நடந்து முடிந்து. ஏற்கெனவே செலுத்தப்பட்ட கட்டணத்தில் தகவல் நகலைக் கொடுக்கும்படி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. நம்மவருக்கு கேட்ட தகவல் உரிய கட்டணத்தில் கிடைத்தது.

கதை முடிந்துவிடவில்லை....

வழக்கு நடந்தபோது, தில்லிக்கும் சண்டீகருக்கும் ஆயில் நிறுவன அதிகாரிகள் வந்து போன செலவு எவ்வளவு எனக் கேட்டு இன்னொரு மனுவை அனுப்பினார். பதில் வந்தது. பலமுறை விமானத்தில் சென்று வந்ததற்கு சில லட்சங்கள் வரை செலவாகிவிட்டதாக. முன்னூறு ரூபாய் கட்டணத்துக்காக செலவிடப்பட்டது லட்சக் கணக்கில். எல்லாம் அரசுப் பணம். மக்கள் பணம்.

பல சமயங்களில் அரசு நிர்வாகத்தின் இதுபோன்ற அவலட்சணங்களை தகவல் சட்டம் வீதிக்குக் கொண்டுவந்திருக்கிறது.

மன்மோகன் அரசின் மிகப்பெரும் சாதனையாகக் கருதப்படுவது இந்தச் சட்டம். இந்தச் சட்டப்படி, அரசு வேலைகளைக் கண்காணிக்கலாம், ஆவணங்களைச் சரிபார்க்கலாம், அலுவலகங்களைச் சோதனையிடலாம். அதெப்படி, இப்படியொரு சட்டத்தை நமது அரசியல்வாதிகள் அனுமதித்தார்கள். தங்களுக்குத் தாங்களே குழிபறித்துக் கொண்டதெப்படி? அவர்கள் சிக்கிக்கொள்ள அவர்களே வலை தயாரித்தது ஏன் என்பன போன்ற சந்தேகங்களெல்லாம் நமக்கு உண்டு.

தெரிந்தோ தெரியாமலோ இப்படியொரு சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. அவ்வப்போது, இந்தச் சட்டம் அரசியல்வாதிகளை அவ்வப்போது சீண்டத் தவறியதில்லை. பார்த்தார்கள், அந்தச் சட்டத்தின் கொடுக்குகளையெல்லாம் பிய்த்தெறியத் தொடங்கிவிட்டார்கள்.

சட்டத்திலிருந்து விலக்களிக்கிறேன் என்று கூறி, எங்கெல்லாம் ஊழல் நடக்கச் சாத்தியமோ அங்கெல்லாம், தகவல் சட்டத்துக்கு வேலையில்லை என்று கூறிவிட்டார்கள். இவர்களது கணக்குப்படி, பிரதமர் அலுவலக நடவடிக்கைகள், அமைச்சர்களின் சொத்து விவரம் போன்றவை மக்கள் தெரிந்துகொள் அவசியமில்லாதவை. இப்போது, ஐஏஎஸ் அதிகாரிகளையும் இந்த விலக்குப் பட்டியலில் சேர்த்துவிட முனைத்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் தவிர வேறு யாரால் பெரிய ஊழலைச் செய்ய முடியும் எனத் தெரியவில்லை.

போகிற போக்கைப் பார்த்தால், பள்ளிக்கூடங்களை மட்டும்தான் சோதனையிட முடியும். ஸ்கூல் வாத்தியார் லஞ்சம் வாங்குகிறாரா என்று மட்டும்தான் நம்மால் கண்காணிக்க முடியும் போலிருக்கிறது.

ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குகிறது என்பதை இந்த விலக்குப் பட்டியலைப் பார்த்தாலே சொல்லிவிட முடியும்.

இந்தப் பதிவில் நான் எந்த மாநிலத்தையும் குறை சொல்ல முனையவில்லை. ஆனால், இந்தியாவிலுள்ள மாநிலங்களையெல்லாம் இந்த விலக்குப் பட்டியல் வழியாக ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களெல்லாம் நேர்மையாகச் செயல்படத் துணிந்திருக்கின்றன என்று தெரியும்.

Saturday, January 30, 2010

RTI புதுவை வருவாய்துறைக்கு ரூ.1500 அபராதம்

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியுரிமை பற்றிய சில ஆவணங்களை தகவலாக கேட்டு கடந்த 8-2-2008 அன்று விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் 3 மாத காலங்கள் ஆகியும் தகவல் தரவில்லை. இதனால் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் 6-7-2009 அன்று மத்திய தகவல் ஆணையம் விசாரணை நடத்தி 6 வார காலத்திற்குள் அந்த ஆவணங்களை பார்வையிடவும், கட்டண மின்றி அந்த ஆவணங்களை வழங்கவும் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவையும் அவர்கள் சரியாக நடை முறைப்படுத்தவில்லை. இதனால் மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன்பேரில் 8-1-2010 அன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தி உரிய நேரத்தில் தகவல் தராததாலும்இ மத்திய தகவல் ஆணையும் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததாலும், புதுவை வருவாய்துறைக்கு ரூ.1500- அபராதம் விதித்து உத்தர விடப்பட்டுள்ளது.

சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன் மாதிரியாக இருக்க வேண்டிய மாவட்ட கலெக்டர் அலுவலகமே உரிய காலத்தில் தகவல் தராததற்கு தண்டனை பெற்றுள்ளது வேதனைக்குரியது. புதுவையில் இதுபோல் பல அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் உரிய காலத்தில் தகவல் தராமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.

Tuesday, January 12, 2010

உச்சநீதிமன்றமும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அடங்கும்: தில்லி உயர்நீதிமன்றம்

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அடங்கும் என்று தில்லி உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.

88 பக்கங்கள் கொண்ட அத்தீர்ப்பில், 'நீதித்துறையின் சுதந்திரம் என்பது நீதிபதிகளுக்கான சலுகை அல்ல, அது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தான்' என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜீத் சென், எஸ்.முரளிதர் ஆகியோர் அடங்கிய குழு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் 2ம் தேதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற அலுவலக விவகாரங்களையும் பெறலாம் என்று தில்லி உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சார்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்றத்தை அச்சட்டத்தின் கீழ் கொண்டு வருவது என்பது நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிப்பதாக அமையும் என்று கூறியிருந்தது. ஆனால், இக்கருத்தை தில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

மேலும், நீதித்துறையில் வெளிப்படையான செயல்பாட்டை உறுதிபடுத்தும் வகையில் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுத்த வாரம் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவார்கள் என்றும் நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது.

Sunday, January 10, 2010

வேளாண் அமைச்சக ஆவணங்களை பொது மக்கள் பார்க்க அனுமதி

மத்திய வேளாண் அமைச்சகம், அதன் பல்வேறு திட்டங்கள் தொடர்பான ஆவணங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அடிமட்ட நிலையில் உள்ள பொது மக்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய வேளாண் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்களை பயனாளிகளுக்கு தெரிவிப்பதில் தயக்கம் இருக்கக்கூடும் என்பதால், அடிமட்ட நிலையில் ஆவணங்கள கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்கு முக்கியதுத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வேளாண்-கூட்டுறவுத்துறை அமைச்சக செயலாளர் டி நந்தகுமார், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமச் செயலாளர்களுக்கு அலுவல் ரீதியாக அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

வெளிப்படையான தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலான இந்த நடவடிக்கை வெற்றி பெறுவதற்கு, மாநில அரசுகள் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு திட்டம் குறித்தும், அதனை செயல்படுத்தும் அமைப்புகள் குறித்த விரிவான விவரங்கள் அடங்கிய ஆவணங்களின் நகல்கள், அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகளின் அலுவலகங்களில் பயனாளிகள், சம்பந்தப்பட்ட அனைவரும் பார்ப்பதற்கும், நகல் எடுப்பதற்கும் வசதியாக வைக்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை தெரிவிப்பதற்கான ஒரு நடைமுறைய மாநில அரசில் உருவாக்க வேண்டும்.

இது தொடர்பாக, மாநில அரசுகள் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் ஒரு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

நம்பகமான முறையிலும், வெளிப்படையான முறையிலும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நன்மைய அடிமட்ட நிலையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

வேளாண் துறையின் திட்டங்கள், மாநில அரசுகளின் துறைகள், சிறப்பு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. மாநில அளவிலான பல்வேறு செயல்படுத்தும் அமைப்புகளிடம் பயனாளிகளின் விவரங்கள் உள்ளன. எனவே, மாநில அரசின் செயல்படுத்தும் அமைப்புகள் மூலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான இந்த நடைமுறைய சிறப்பாகவும், நல்ல முறையிலும் செயல்படுத்தலாம்.

திட்டச் செலவுகள், கிடைக்கும் மானியம், திட்டங்களின் பயனாளிகள் தொடர்பான விவரங்களை அனைத்து செயல்படுத்தும் அமைப்புகளும் தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டால், திட்டங்களின் செயல்பாடு மேலும் நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் அமையும்.

வேளாண்மையின் பல்வேறு துறைகள் மேம்பாட்டுக்காக, வேளாண்மை, கூட்டுறவுத்துறை மாநிலங்களுக்கு 23 திட்டங்களுக்கு மானியம் வழங்குகிறது. இத்திட்டங்களில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா, எண்ணெய் வித்துக்கள், எண்ணெய் பனை, பருப்பு வகைகள் மற்றும் சோளத்திற்கான ஒருங்கிணைந்த திட்டம், தேசிய தோட்டக்கலைத் திட்டம், பருத்தி, சணல் தொழில்நுட்பத் திட்டம் ஆகியவையும் அடங்கும் என்று கூறியுள்ளார்.


Sunday, January 3, 2010

தகவல் பெறுவதற்கான படிகள் சுருக்கமாக

1. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 , பிரிவு 5ன் கீழ் பொது தகவல் அலுவலரிடம் மனு செய்தல் (சட்டப் பிரிவு 7(1)ன்படி தகவல் 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் )

2. இச்சட்டப் பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீடு மேல் முறையீட்டு அலுவலருக்கு விண்ணப்பித்தல் (முதுநிலை பொது தகவல் அலுவலர்) விண்ணப்பம் பெற்ற 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட வேண்டும். சில நேர்வுகளில் 45 நாட்களுக்குள் தகவல் அளிக்கலாம்.

3. இச்சட்டப் பிரிவு 19(3)ன்கீழ் 2வது மேல் முறையீடு தமிழ் நாடு தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். (முதல் மேல்முறையீட்டு அலுவலரின் ஆணை பெற்ற 90 நாட்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு விண்ணப்பிக்க வேண்டும் )

4. இச்சட்டப் பிரிவு 19(9)ன்கீழ் தமிழ் நாடு தகவல் ஆணையம் தனது முடிவினையும் மற்றும் மேல்முறையீட்டுக்கான உரிமைகளையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும். மேற்கூறிய முடிவுகளால் பாதிக்கப்பட்டோர் பரிகாரம் வேண்டி நீதிப் பேராணை வழக்கு இந்திய அரசு அமைப்பு சட்டத்தின்கீழ் தொடரலாம்.

தண்டனைகள்

மாநில தகவல் ஆணையமானது, புகார் அல்லது மேல்முறையீடு எதனையும் தீர்மானிக்கும்போது:

1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம் ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம் ஒன்றினை மறுக்குமிடத்தும் ;

2. பொது தகவல் அலுவலர் காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க மறுக்குமிடத்தும் ;

3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான கோரிக்கையினை உள்நோக்கத்துடன் மறுக்குமிடத்தும் ;

4. கோரிக்கையின் பொருளாக இருந்த தகவலை அழிக்குமிடத்தும் ;

5. பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுக்குமிடத்தும்; அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லது தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250/-

தண்டமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும். எனினும், மொத்த தண்டத் தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், தண்டம் விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமான வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும்.

பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும், கவனத்துடனும், செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு, அவரையே சார்ந்ததாகும்.

மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில், பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக, அவருக்கு பொருந்தத்தக்க பணிவிதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்.

மேல்முறையீட்டு மாதிரி விண்ணப்ப படிவம்

பெறுநர்

( தகுதியுடைய அதிகாரி பற்றி குறிப்பிடப்படவேண்டும்)

1) விண்ணப்பதாரரின் முழுப்பெயர் :

2) முகவரி :

3) வேண்டப்படும் தகவல் விவரங்கள் :

4) வேண்டப்படும் தீர்வு :

5) தகவல் தொடர்புடைய துறை அல்லது அலுவலரின் பெயர்:

6) தகவலின் பொருண்மை :

7) தகவல் தொடர்புடைய பகுதி/ஆண்டு/இடம் :

8) தகவல் வேண்டப்படுவதின் நோக்கம் :

இடம் :

நாள் :

விண்ணப்பதாரரின் ஒப்பம்