Monday, January 9, 2012

கறுப்புப் பணம் பதுக்கியிருப்பவர்கள் யார் யார்? கடிதத்தை வெளியிடுக மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

கறுப்புப் பணம் விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் தில்லி காவல்துறை அதிகாரிகளுடன் மேற் கொண்ட கடிதத்தொடர்பு விவரத்தை ஜனாதிபதி தலைமைச் செயலகம் வெளியிட வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

அயல்நாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கறுப்புப் பணம் தொடர்பாக வெளி யுறவு மற்றும் நிதித்துறை அமைச்சகத் திற்கு தான் எழுதியது தொடர்பாக எடுக் கப்பட்ட நடவடிக்கையை அறிந்துகொள்ள ஒரு தகவல் உரிமை ஆர்வலர் மனு செய்தார். இந்த மனு அடிப்படையில் தகவல் ஆணையம் ஜனாதிபதி அலுவல கத்தை, கறுப்புப் பணம் தொடர்பான கடிதத் தொடர்பு விவரங்களை வெளியிடக் கூறியுள்ளது.

இதுதொடர்பான விசாரணையின் போது மனுதாரர், கறுப்புப்பணம் விவகாரம் தொடர்பாக வங்கி பிரிவு, நிதித்துறை அமைச்சகம் வெளியுறவுத்துறை அமைச் சகம், தில்லி காவல்துறை ஆகியவற்று டன் ஜனாதிபதி அலுவலகம் மேற் கொண்ட கடித விவரத்தையும் கேட்டிருந்தார்.

மனுதாரர் பல நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் மத்திய பொது தகவல் அதிகாரி சில விவரங்களை தந்து, இதர விவரங்களை பெற சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை அணுகு மாறு கூறியுள்ளார்.

மனுதாரரின் விவரத்தை பரிசீலித்தப் போது, தகவல்கள் வெளியிடுவதில் எந்த விதப் பிரச்சனையும் இல்லை என்பது தெரியவந்தது என தலைமை தகவல் ஆணையர் சத்யானந்த் மிஸ்ரா தனது உத்தரவில் கூறியுள்ளார்.

10 நாட்களுக்குள் ஜனாதிபதி அலு வலகம் மனுதாரர் கோரும் விவரங்களை தரவேண்டும் என்றும் தகவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.