Sunday, November 18, 2012

தகவல் உரிமை சட்டம் : தமிழகத்தில் விழிப்புணர்வு இல்லை

 



தமிழ்நாட்டில் பொது மக்களிடையே தகவல் அறியும் சட்டம் குறித்த விழிப்புனர்வு போதுமான தாக இல்i என்று மாநில தகவல் ஆணையர் கே.எஸ். ஸ்ரீபதி கூறினார்.சென்னையில் மத்திய தகவல் ஒளிப்பரப்பு அமைச் சகத்தின் நாடக பிரிவு சார் பில் வியாழனன்று (நவ.15) தகவல் அறியும் சட்டம் குறித்து நாடக கலைஞர்க ளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமை துவக்கி வைத்துப்பேசிய அவர், இச்சட்டம் அறிமுகமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இச் சட்டத்தின் கீழ் மாநிலத் தில் பொதுமக்கள் பல தக வல்களை கேட்டறிந்து பயன் பெற்று வருகிறார்கள். ஆனால் சிலர் இந்த சட்டத் தின் கீழ தவறான தகவல் களை கேட்டு நேரத்தை வீணடிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.தகவல் அறியும் உரிமை சட்டம் எதற்காக என்பதை கூட இன்னும் பெரும் பாலான மக்களுக்கு தெரியா மல் உள்ளது என்று கூறிய அவர் இதுகுறித்த சம்மந்த பட்ட துறைகள் மக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்த திட் டத்தை மக்களிடையே கொண்டு செல்லும் வகை யில் நவ. 19 முதல் 30 வரை தமிழகத்தில் விழுப்புரம், நாமக்கல், வேலூர், கிருஷ்ண கிரி, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர், நாகப்பட்டி னம், பெரம்பலூர், திருப் பூர், திருவண்ணாமலை, தர்மபுரி, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புனர்வு முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதா கவும் ஸ்ரீபதி கூறினார்.இந்த பயிற்சி பட்டறை யில் தமிழக அரசின் முதன் மைசெயலர் எம்.குற்றலிங் கம், பத்திரிகை தகவல் அலு வலக கூடுதல் தலைமை இயக்குநர் கே.எம். ரவீந் திரன், மத்திய அரசின் நாட கம் மற்றும் பாடல் பிரிவின் இயக்குநர் எம். ராஜாமன் னார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.